close
Choose your channels

2000ஐ நெருங்கியது கொரோனா பாதிப்பு: சென்னையில் வழக்கம்போல் உச்சம்

Friday, June 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக அரசின் சுகாதாரத்துறை கொரோனாவுக்கு எதிராக பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்தும், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அரசுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் அதிர்ச்சியாக உள்ளது. இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு 2000ஐ நெருங்கிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழகத்தில் இன்று 1982 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சற்றுமுன் உறுதி செய்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 40,698பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1982 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 1477 பேர்கள் என்பதும், இதனால் சென்னையில் கொரோனாவின் பாதிப்பு 28,924ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. வழக்கம்போல் 24 மணி நேரத்தில் இன்றுதான் சென்னையில் அதிகபட்ச பாதிப்பு என்பது அதிர்ச்சிக்குரிய தகவல் ஆகும்.

மேலும் இன்று கொரோனாவுக்கு தமிழகத்தில் 18 பேர்கள் பலியாகியுள்ளதால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 367ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று கொரோனாவில் இருந்து 1342 பேர் குணமாகியுள்ளனர் என்பது மட்டுமே ஒரு ஆறுதலான தகவல் ஆகும். இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 22047பேர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.