close
Choose your channels

இன்று ஒரே நாளில் இரண்டு அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா!

Saturday, September 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று ஒரே நாளில் இரண்டு அதிமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் ஏற்கனவே அதிமுக, திமுக மற்றும் காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏக்கள் சிலர் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும், அதில் ஒரு சிலர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று காலை வெளியான தகவலின்படி செய்யாறு அதிமுக எம்எல்ஏ தூசி மோகன் என்பவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அதிமுக எம்எல்ஏ எஸ்பி சண்முகநாதன் என்பவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனது வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது

இன்று ஒரே நாளில் 2 அதிமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் அதிமுகவினர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடர் விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் ஆகியோர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.