வாயுக்கசிவால் சிகிச்சை பெற்றுவந்த 22 நோயாளிகள் உயிரிழப்பு… ம.பி. யில் நடந்த சோகம்!

  • IndiaGlitz, [Wednesday,April 21 2021]

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் செயல்பட்டு வந்த ஜாகிர் உசேன் மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு கசிவு ஏற்பட்டு 22 நோயாளிகள் உயிரிழந்து உள்ளனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜாகிர் உசேன் மருத்துவமனையில் இன்று பிற்பகல் நோயாளிகளுக்குப் பயன்படுத்தும் ஆக்சிஜன் சிலிண்டருக்கு ஆக்சிஜன் டேங்கரில் இருந்து ஆக்சிஜன் வாயு நிரப்பும் பணி நடைபெற்று இருக்கிறது. இந்தப் பணியின்போது எதிர்பாராத விதமாக டேங்கர் லாரியில் இருந்து அதிகளவு ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டு இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த முடியாத ஊழியர்கள் பதற்றமடைந்து உள்ளனர்.

இந்நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அந்த மருத்துவமனையின் 22 நோயாளிகள் போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்து உள்ளனர். இதையடுத்து வாயுக்கசிவை கட்டுப்படுத்த தீயணைப்புத் துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு வாயுக்கசிவைக் கட்டுப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஜாகிர் உசேன் மருத்துவமனையில் ஆக்சிஜன் வென்டிலேட்டர் உதவியுடன் 150 நோயளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு இருக்கிறது.

More News

கர்ப்பமாக இருந்தபோது தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை: அதிர்ச்சி தகவல்

கர்ப்பமாக இருக்கும் போது தற்கொலைக்கு முயன்றதாக பிரபல நடிகை ஒருவர் பேட்டி அளித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில், காவல் அதிகாரிக்கு சிறைதண்டனை...!

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்பவரை காவல் அதிகாரிகள் கொலை செய்ததை தொடர்ந்து, இவ்வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸிடம் சண்டைபோடும் பாலிவுட் நடிகை… வைரல் பதிவு!

கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு பரவத் துவங்கியபோது எப்படி  மக்களைப் பீதியில் வைத்து இருந்ததோ அதேபோல தற்போது இரண்டாவது அலையிலும் மக்கள் மத்தியில் கடும் சலிப்பை உண்டாக்கி இருக்கிறது.

ரிவைசிங் கமிட்டி சென்று 'யூ/ஏ' சான்றிதழ் பெற்ற பிரபல நடிகரின் படம்

ஜிவி பிரகாஷ் நடித்த திரைப்படம் ஒன்றுக்கு  சென்சார் அதிகாரிகள் 'ஏ' சான்றிதழ் தருவதாக கூறிய நிலையில் படக்குழுவினர் ரிவைசிங் கமிட்டி சென்று தற்போது 'யுஏ' சான்றிதழ் பெற்று உள்ளனர்

ரஜினியின் 'அண்ணாத்த' படத்தில் இணைந்த 'சுல்தான்' நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமோஜிராவ்