close
Choose your channels

தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா: 40ஆக உயர்வு

Saturday, March 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. வேலூர் கும்பகோணம் ஆகிய பகுதிகளில் உள்ள நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே 38 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

கும்பகோணத்தை சேர்ந்த 42 வயது நபர் ஒருவர் சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு பயணம் செய்துவிட்டு கும்பகோணத்திற்கு திரும்பியதாகவும் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது

அதேபோல் இங்கிலாந்திலிருந்து சமீபத்தில் வேலூருக்கு திரும்பிய 49 வயது நபருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.