2.0 எமிஜாக்சனின் புதிய போஸ்டரை ரிலீஸ் செய்த ஷங்கர்

  • IndiaGlitz, [Wednesday,October 11 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் '2.0' படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் மீதமிருக்கும் ஒரே ஒரு பாடலின் படப்பிடிப்பு இன்று மும்பையில் தொடங்கவுள்ளதாக வெளிவந்த செய்தியினை நேற்று பார்த்தோம்

இந்த நிலையில் இந்த தகவலை இயக்குனர் ஷங்கர் இன்று தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்தது மட்டுமின்றி எமிஜாக்சனின் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அட்டகாசமான எமிஜாக்சனின் ரோபோ வடிவ தோற்றம் அனைவரையும் கவர்ந்துள்ளது. இன்று தொடங்கும் பாடலின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. 

மேலும் வரும் 26ஆம் தேதி துபாயில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. அதனையடுத்து நவம்பர் 22ஆம் தேதி டீசரும், டிசம்பர் 12ஆம் தேதி ரஜினி பிறந்த நாளில் டிரைலரும் வெளியாகவுள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் 2018ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி வெளியாகிறது.

More News

'மெர்சலை அடுத்து டுவிட்டர் இமோஜியை பெறும் 2 படங்கள்

தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு திரைப்படத்தின் பெயரில் டுவிட்டர் இமோஜி பெற்ற ஒரே படம் என்ற பெருமையை தளபதி விஜய்யின் 'மெர்சல்' திரைப்படம் பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே.

'விவேகம்' படத்தை பின்தொடரும் விஜய்சேதுபதி படம்

விஜய்சேதுபதியின் புதிய படமான 'ஜூங்கா' திரைப்படம் தற்போது வெளிநாட்டில் விறுவிறுப்பான படப்பிடிப்பில் உள்ளது. 'வனமகன்' சாயிஷா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தை இயக்குனர் கோகுல் இயக்கி வருகிறார்

மலைக்க வைக்கும் 'மெர்சல்' ரிலீஸ் திரையரங்குகளில் எண்ணிக்கை

இந்த ஆண்டு விஜய் ரசிகர்களுக்கு 'மெர்சல்' தீபாவளி என்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படம் உலகின் பெரும்பாலான நாடுகளில் மிக அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது

பஞ்சாயத்து தலைவர் கேரக்டர் படத்தில் எத்தனை நிமிடங்கள்? அட்லி

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் இந்த படத்தின் புதுப்புது செய்திகள் படத்தின் எதிர்பார்ப்பை உயர்த்தி கொண்டே வருகிறது.

மல்டிபிளக்ஸ் முதலாளிகளின் பிடிவாதத்தால் பேச்சுவார்த்தையில் சிக்கல்?

தமிழக அரசு திரைத்துறையினர்களுக்கு விதித்த 10% கேளிக்கை வரியை நீக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில்,