கழிவுநீர் தொட்டியில் விழுந்து 2 வயது குழந்தை பலி! தொடரும் பெற்றோர்களின் அலட்சியம்

  • IndiaGlitz, [Monday,December 09 2019]

பெற்றோர்களின் அலட்சியத்தால் சுஜித் உள்பட ஒருசில குழந்தைகள் ஆழ்குழாய் கிணறு மற்றும் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த பரிதாப சம்பவங்கள் குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். ஒரு குழந்தையை 5 வயது வரை வளர்க்கும் வரை பெற்றோர்களின் கவனமாக இருக்க வேண்டும் என்றும் , தங்கள் கண்காணிப்பிலேயே 24 மணி நேரமும் குழந்தையை வைத்திருக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் அவ்வப்போது அறிவிப்பு வந்த போதிலும், பெற்றோர்களின் கவனக்குறைவு காரணமாக அவ்வப்போது குழந்தைகள் பலியாகி வரும் சோகமான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று இரண்டு வயது குழந்தை ஒன்று கழிவுநீர் தொட்டியில் விழுந்து பரிதாபமாக பலியாகி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் என்ற பகுதியின் அருகே உள்ள சிவனாபுரம் என்ற கிராமத்தில் சாமுண்டி என்பவரின் மகன் இன்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென அந்த சிறுவனை காணவில்லை. இதனால் பதட்டமடைந்த பெற்றோர்கள் வீட்டின் அருகில் உள்ள அனைத்து இடங்களிலும் தேடினர்.

அப்போது வீட்டின் அருகே உள்ள பயன்படுத்தப்படாத கழிவுநீர் தொட்டி ஒன்றில் அந்த குழந்தை விழுந்து இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அந்த குழந்தையை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர். ஆனால் குழந்தை இறந்து பல மணி நேரம் ஆகி விட்டதாக மருத்துவர்கள் கூறியதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து குழந்தையின் பெற்றோர்களிடமும், அருகிலுள்ளவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News

மயக்க மருந்து கொடுத்து ஆபாச வீடியோ எடுத்த கணவரின் மாமா: அரிவாளால் வெட்டி கொலை செய்த இளம்பெண்

23 வயது இளம்பெண் ஒருவரின் கணவரின் அக்காள் கணவர் மயக்க மருந்து கொடுத்து தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்ததை அறிந்து ஆத்திரமடைந்து கணவரின் அக்காள் கணவர்

ரசிகர்களுக்கு ஆர்யா-சாயிஷா நாளை அறிவிக்கவிருக்கும் முக்கிய தகவல்!

தமிழ் திரை உலகின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்றான ஆர்யா-சாயிஷா ஜோடி, முதல் முதலாக ஜோடியாக நடித்த திரைப்படம் 'டெடி'. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

குளிப்பதை வீடியோ எடுத்து 17 வயது சிறுமியை சீரழித்த 30 வயது பெண்!

பெண்களுக்கு ஆண்களால்தான் பாலியல் பலாத்கார அபாயம் ஏற்படுகிறது என்றால், பெண்களுக்கு பெண்களே பாலியல் பலாத்கார மிரட்டல் விடுத்த சம்பவம் கேரளாவில் நடைபெற்று உள்ளது அனைவரையும் அதிர்ச்சி அளித்துள்ளது

கீர்த்திசுரேஷை அடுத்து 'தலைவர் 168' படத்தில் இணைந்த பிரபல நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், டி இமான் இசையமைப்பில் தயாராக உள்ள 'தலைவர் 168' படத்தின் அறிவிப்பு

முதன் முறையாக தாயின் குரலைக் கேட்கும் குழந்தை..!வீடியோ.

செவித்திறன் இல்லாமல் பிறந்த குழந்தை ஒன்றுக்கு ஹியரிங் எய்ட் இயந்திரம் பொருத்தப்பட்டவுடன் தாயின் குரலைக் கேட்டு அந்தக் குழந்தை காட்டும் ரியாக்‌ஷன் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது