close
Choose your channels

10 நாட்களாக குளிக்காத கணவன், விவாகரத்து கேட்கும் மனைவி!

Saturday, January 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் தனது கணவர் 10 நாட்களாக குளிக்கவில்லை பல் துலக்கவில்லை, சேவ் செய்யவில்லை என்ற காரணத்திற்காக விவாகரத்து வேண்டும் என்று நீதிமன்றப் படியேறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலத்தில் பாட்னா அருகிலுள்ள வைசாலி என்ற பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண் சோனிதேவிக்கும் 23 வயது மணிஷ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை.

இந்த நிலையில் திடீரென சோனிதேவிஒரு புகார் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கேட்டுள்ளார். அதில் ’தனது கணவர் கடந்த 10 நாட்களாக குளிக்கவில்லை, பல் துலக்கவில்லை, ஷேவ் கூட செய்யவில்லை என்றும், அது மட்டுமின்றி ஆச்சார பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பது இல்லை என்றும் கூறி உள்ளார். எனவே அவரிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும் என்று தனது மனுவில் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து பெண்கள் அமைப்பு ஒன்று அவருக்கு கவுன்சிலிங் கொடுத்து வருகிறது. மேலும் அவருடைய கணவரை அழைத்து அவருக்கு அறிவுரை கூறியதோடு சோனி தேவியின் கூறியதை கவனத்தில் கொள்ளும்படியும் இல்லாவிட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

சின்ன சின்ன காரணங்களுக்காக விவாகரத்து கேட்டு நீதிமன்ற படியேறும் வழக்கம் தற்போது அதிகரித்து வருவதாக பெண்கள் அமைப்பு நிர்வாகி ஒருவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.