விஷசாராயம் அருந்தி பலர் உயிரிழப்பு… தீபாவளியில் நடந்த சோகம்!

  • IndiaGlitz, [Friday,November 05 2021]

பீகார் மாநிலத்தில் விஷசாராயம் அருந்தி 24 பேர் உயிரிழந்து விட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் கடந்த இரு மாதங்களில் இது 3 ஆவது நிகழ்வு என்றும் பகீர் தகவல் கூறப்படுகிறது.

பீகார் மாநிலத்தின் முதல்வர் நிதிஷ் குமார் கடந்த 2016 முதல் அம்மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்தி இருக்கிறார். இதன்படி மது தயாரித்தல், விற்பனை செய்தல், ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டுசெல்வது, அருந்துவது போன்றவை குற்றங்களாகக் கருதப்படுகின்றன. இந்நிலையில் பீகார் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே சாராயம் காய்ச்சுவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து விட்டது எனப் புகார் கூறப்படுகிறது.

தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி ஆங்காங்கே எரிசாராயங்கள் விற்பனைச் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் கோபால்கஞ்ச் மற்றும் மேற்கு சாம்பான் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 24 பேர் விஷசாராயம் அருந்தி உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மோசமான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் கொடுத்த கிராம மக்கள் இறந்தவர்கள் அனைவருமே சாராயம் அருந்தியதாகவும் குடித்த சிறிது நேரத்தில் சுயநினைவின்றி மயங்கி விழுந்ததாகவும் கூறியுள்ளனர். பின்னர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோன்ற சம்பவம் அந்த மாநிலத்தில் அடிக்கடி நிகழ்வதாகக் கூறப்படும் நிலையில் கடந்த இரு மாதங்களில் இது மூன்றாவது முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

என் படத்தில் குறையா? மணிரத்னம் மீது அதிருப்தி அடைந்த பொன்ராம்!

தனது படத்தில் குறை இருந்ததாக மணிரத்னம் கூறியதற்கு இயக்குனர் பொன்ராம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தீபாவளியை சிறப்பித்த பிரபலங்கள்… கண்கவரும் கலர்ஃபுல் புகைப்படங்கள்!

இந்த ஆண்டு “தீபஒளி“ திருநாளை இந்தியப் பிரபலங்கள் பலரும்

கமல்ஹாசனுக்குக் பிறந்த நாள் ட்ரீட் கொடுத்த லோகேஷ்: 'விக்ரம்' போஸ்டர் ரிலீஸ்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'விக்ரம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது

ஆக்ரோஷ கேப்டன் விராட் கோலிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தன்னுடைய 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். “ரன் மெஷின்“,

பாவனியை அடிக்க கையோங்கிய தாமரை: பாவனி பதிலுக்கு என்ன செய்தார் தெரியுமா?

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இடையே இன்று கேப்டன் டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் இதில் பல ஆவேசமான சம்பவங்கள் நடைபெற்று வருவதை முதல் இரண்டு புரமோவில் பார்த்தோம்.