close
Choose your channels

கஜா புயல் எதிரொலி: 24 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Friday, November 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வங்கக்கடலில் ஏற்பட்ட கஜா புயல் இன்று அதிகாலை கரையை கடந்தபோது பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கஜா புயலின் கண்பகுதி இன்று அதிகாலை கரையை கடந்தபோதிலும் முழுமையாக புயல் கரையை கடக்கவில்லை என்பதால் தொடர்ந்து அந்த பகுதியில் மழை பெய்து வருகிறதுல்.

இதனை முன்னிட்டு இன்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில்  பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை வந்த தகவலின்படி தமிழகத்தில் உள்ள 24 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த 24 மாவட்டங்களில் நாகை, கடலூர், திருச்சி, ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், மதுரை, தஞ்சை, சேலம், சிவகங்கை, அரியலூர், திருப்பூர், திண்டுக்கல், கரூர் , தேனி ஆகிய மாவட்டங்கள் அடங்கும். அதேபோல் புதுச்சேரி, காரைக்கால், ஆகிய இடங்களில் உள்ள  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஈரோடு, கோவை, சேலம்,  விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.