close
Choose your channels

ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள்: 25 வயது பெண்ணுக்கு சுகப்பிரசவம்

Monday, February 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஈராக் நாட்டில் 25 வயது இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் பிறந்துள்ளது. இதில் ஆறு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழு குழந்தைகளும் சுகப்பிரசவத்தில் பிறந்ததாகவும், தாயும் குழந்தைகளும் நலமுடன் இருப்பதாகவும் ஈராக் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரசவமான இளம்பெண்ணுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் இருப்பதால் இவருக்கு தற்போது மொத்தம் பத்து குழந்தைகள் உள்ளது.

ஏழு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்தது குறித்து கருத்து தெரிவித்த 25 வயது இளம்பெண் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'இனிமேல் குழந்தை பெற்று கொள்ளும் எண்ணம் இல்லை என்றும், அனைத்து குழந்தைகளையும் நல்ல
முறையில் வளர்ப்பதே எங்களது கடமை என்றும் தெரிவித்தார்.

கடந்த 1997ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு உலகில் முதல்முறையாக ஏழு குழந்தைகள் பிறந்தன. அதற்கு பின்னர் தற்போதுதான் ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகளை ஒரு பெண் பெற்றெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.