2500ஐ தாண்டினாலும் நேற்றை விட குறைவு: தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் இரண்டாயிரத்தை தாண்டியது என்பதும் குறிப்பாக நேற்று 2710 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு என்றும் வெளிவந்த செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் 2500ஐ தாண்டினாலும் நேற்றைவிட குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழக சுகாதாரத்துறையின் தகவலின்படி தமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64,603 என அதிகரித்துள்ளது. மேலும் சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 1380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44.205 ஆக உயர்வு என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவால் 39 பேர் மரணம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி ஆகும்.

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 1227 பேர் குணமடைந்துள்ளனர் என்பது தான் ஒரே ஆறுதல் என்பதும், இதனையடுத்து பேர் மொத்தம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 35,339 பேர்கள் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று தமிழகத்தில் 25,148 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 944,352பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

More News

ஏர் இந்திய விமானங்களுக்கு அமெரிக்காவில் தடை: புதிய சிக்கலில் மாட்டிக்கொண்ட அமெரிக்கா வாழ் இந்தியர்கள்!!!

கொரோனா பரவல் ஆரம்பித்ததில் இருந்தே அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் அடுக்கடுக்கான பிரச்சனையை சந்தித்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுக்கு கொரோனா பாதிப்பு: மனைவிக்கும் பரவியதாக தகவல் 

பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

8 வருடங்களுக்கு முன் பதிவு செய்த டுவிட்டை டெலிட் செய்த அக்சயகுமார்: ஏன் தெரியுமா?

பிரபல பாலிவுட் நடிகர் அக்சயகுமார் எட்டு வருடங்களுக்கு முன் பதிவு செய்த டுவீட் ஒன்றை தற்போது டெலிட் செய்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

பிறந்த நாள் விழாவில் பிரியாணியும் கொரோனாவும் பரிமாறிய அரசியல் பிரமுகர்

அரசியல் பிரமுகர் ஒருவர் தனது பிறந்த நாள் விழாவில் பிரியாணியை மட்டுமின்றி கொரோனாவையும் சேர்த்து பரிமாறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பேருந்தில் இருந்து திடீரென இறங்கி அலறியடித்து ஓடிய பயணிகள்: கொரோனா படுத்தும்பாடு

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் பேருந்தில் பயணம் செய்ததை அறிந்ததும் அந்த பேருந்தில் என்ற சக பயணிகள் அலறி அடித்துக்கொண்டு பேருந்திலிருந்து இறங்கி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது