கொரோனாவில் இருந்து குணமாகிய 26 வயது இளைஞர் 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

துபாயில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதன் பின் குணமான இந்திய இளைஞர் ஒருவர் ஏழாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக துபாயில் பணி செய்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் இவருக்கு கொரனோ நோய் தொற்று ஏற்பட்டது. அதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் மே 7-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

டிஸ்சார்ஜ் ஆகி தான் தங்கும் அறைக்கு வந்ததில் இருந்தே அவர் மனநிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. உடன் இருக்கும் நண்பர்களே அவரை வெறுப்பது போன்றும், அவரை கொலை செய்து விடுவார்களோ என்று பயந்து இருந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் திடீரென நேற்று அவர் ஏழாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து விசாரணை செய்த போலீஸ் துபாய் போலீசார் இது தற்கொலைதான் என்று உறுதி செய்தனர். மேலும் அவருடன் தங்கியிருந்த அவர்களிடம் விசாரணை செய்ததில் அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது. கொரோனாவில் இருந்து மீண்ட ஒரு இந்திய இளைஞர் துபாயில் ஏழாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சென்னையை சேர்ந்த ஒருவர் இன்று தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவ ஊழியர் மரணம்: விடுமுறை அளிக்கவில்லை என புகார்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவ ஊழியர் ஒருவருக்கு விடுமுறை அளிக்காததால் அவர் பரிதாபமாக மரணம் அடைந்ததால் மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து சோதனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்த WHO!!! நடப்பது என்ன???

கொரோனா சிகிச்சைக்கு இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட எந்த மருந்தையும் உலகச் சுகாதார அமைப்பு பரிந்துரைக்க வில்லை.

கொரோனா விஷயத்தில் உலக நாடுகள் மெத்தனம் காட்டினால் “அது இரண்டாவது உச்சத்தைக் காட்டிவிடும்” – WHO எச்சரிக்கை!!!

கொரோனா பரவல் எண்ணிக்கை உலக நாடுகளையே கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி இருக்கிறது

மகன் தாலி கட்டிய சில நிமிடங்களில் தந்தை மரணம்: கொரோனா தந்த அதிர்ச்சி

நாகர்கோவிலில் நடந்த ஒரு திருமணத்தில் மணமகன் தாலி கட்டிய அடுத்த சில நிமிடங்களில் அவருடைய தந்தை திடீரென மரணம் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? பரபரப்பு தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக நான்காம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில் இருந்துவரும் நிலையில் வரும் 31-ஆம் தேதியுடன் இந்த ஊரடங்கு முடிவடைகிறது