close
Choose your channels

கொரோனாவில் இருந்து குணமாகிய 26 வயது இளைஞர் 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

Tuesday, May 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

துபாயில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதன் பின் குணமான இந்திய இளைஞர் ஒருவர் ஏழாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக துபாயில் பணி செய்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் இவருக்கு கொரனோ நோய் தொற்று ஏற்பட்டது. அதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் மே 7-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

டிஸ்சார்ஜ் ஆகி தான் தங்கும் அறைக்கு வந்ததில் இருந்தே அவர் மனநிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. உடன் இருக்கும் நண்பர்களே அவரை வெறுப்பது போன்றும், அவரை கொலை செய்து விடுவார்களோ என்று பயந்து இருந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் திடீரென நேற்று அவர் ஏழாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து விசாரணை செய்த போலீஸ் துபாய் போலீசார் இது தற்கொலைதான் என்று உறுதி செய்தனர். மேலும் அவருடன் தங்கியிருந்த அவர்களிடம் விசாரணை செய்ததில் அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது. கொரோனாவில் இருந்து மீண்ட ஒரு இந்திய இளைஞர் துபாயில் ஏழாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சென்னையை சேர்ந்த ஒருவர் இன்று தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos