இசைக்காக 288 நாட்கள் பட்டிணிப்போராட்டம்!!! கோரிக்கை நிறைவேறாமலே உயிர்பிரிந்த அவலம்!!!

  • IndiaGlitz, [Saturday,April 04 2020]

 

துருக்கியில் ஒரு பெண் இசைக்கலைஞர் 288 நாட்கள் பட்டிணிப் போராட்டத்திற்குப் பின்பு நேற்று உயிரிழந்துள்ளார். 28 வயதான ஹெலின் போலக் என்பவர் ‘க்ரூப் யோரம்’ என்ற இசைக்குழுவை நடத்தி வந்தார். இந்த இசைக்குழு துருக்கியின் நாட்டுப்புறப் பாடல்களை இணைத்து தனது கலையை வெளிப்படுத்தி வந்ததும் குறிப்பிடத் தக்கது. மேலும், க்ரூம் யோரம் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் மக்களின் துயரங்களை வெளிப்படுத்தும் விதமாகவும் பலக்கருத்துக்களை தங்களது பாடல்களில் வெளிப்படுத்தி வந்தது. இத்தகைய செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் விதமாக அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு க்ரூப் யோரம் இசைக்குழுவுக்குத் தடை விதித்தது.

மேலும், அரசிற்கு எதிரான கருத்துக்களை வெளிப்படுத்திய குற்றத்திற்காக அந்தக்குழுவில் பலர் கைதும் செய்யப்பட்டனர். ஹெலின் போலக் தனது இசைக்குழுவிற்கு போடப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும், கைது செய்யப்பட்ட தனது குழு உறுப்பினர்களை வெளியே விடவேண்டும் எனறும் கோரிக்கை வைத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தார். அரசின் கவனத்திற்கு போராட்டம் குறித்த தகவல் கடந்த மாதம் கொண்டு செல்லப்பட்டது. ஆனால், துருக்கி அரசு ஹெலின் போலக் உண்ணாவிரதத்தை நிறுத்தாமல் எந்த பேச்சுவார்த்தையையும் மேற்கொள்ள இயலாது எனத் தெரிவித்து விட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் 11 ஆம் தேதி உடல்நிலை மிகமோசமானதால் ஹெலன் போலிக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தனது கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்து சிகிச்சைக்கு மறுத்துவிட்டார். அதனால் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். இசைக்காகவும் தனது குழு உறுப்பினர்களுக்காகவும் 288 நாட்களாக பட்டிணி இருந்து உயிர் நீத்துள்ள பெண்இசைக் கலைஞருக்கு தற்போது துருக்கி மக்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். 288 நாட்களும் தொடர்ந்து பட்டிணிப் போராட்டம் நடத்திவந்த அவரது அஞ்சா நெஞ்சத்தைக் கண்டு தற்போது கலையுலகமும் வியந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனா வைரஸ் பேசினால் கூட பரவுமா??? அதிர்ச்சி தகவல் வெளியிட்ட அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி!!!

“கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மும்போதும், இருமும்போதும் வெளிப்படும் நீர்துளிகள் மூலம் பரவலாம்”, எனவே எச்சரிக்கைக்காக மாஸ்க் அணிவது அவசியம் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியது.

''வடகொரியாவில் கொரோனா தொற்று இல்லை'' உண்மை நிலவரம் என்ன???

கொரோனா தாக்கத்தால் உலக நாடுகள் அனைத்தும் அலறிக்கொண்டிருக்கும் போது ஒரு நாடு மட்டும் ஏவுகளை சோதனைகளை நிகழ்த்திக்கொண்டு மிகவும் அமைதியாக இருக்கிறது.

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மின்விளக்குகளை அணைத்தால் என்ன நடக்கும்???

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் அனைவரும் தங்களது வீடுகளில் இருக்கும் மின்விளக்கை அணைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்

கொரோனாவிற்கு சிகிச்சை அளித்து, இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திய மருத்துவர்கள்!!!

கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும், அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் அவலம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே வருகிறது.

கொரோனாவை விரட்ட சின்னச்சின்ன விஷயங்களை செய்தால் போதும்: தமன்னா

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை