close
Choose your channels

திடீரென கிளம்பிய இளம்பெண்ணின் BMW கார்: நாய்க்குட்டியால் ஏற்பட்ட விபத்து

Sunday, August 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டெல்லியில் இளம் பெண் ஒருவர் BMW காரில் உட்கார்ந்திருந்த நிலையில் திடீரென அவருடைய நாய்க்குட்டி துள்ளி குதித்ததால் அதிர்ச்சி அடைந்து தவறுதலாக ஆக்சிலரேட்டரை மிதித்தார். இதனால் அந்த கார் திடீரெனக் கிளம்பி விபத்தை ஏற்படுத்தியதால் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

டெல்லியை சேர்ந்த பேஷன் டிசைனர் பணி செய்யும் இளம்பெண் ஒருவர் BMW காரில் உட்கார்ந்து இருந்தார். அவருடன் அவர் வளர்த்து வந்த செல்ல நாய்க்குட்டியும் இருந்தது. அந்த நாயுடன் அவர் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென அந்த நாய் துள்ளி குதித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் தெரியாமல் ஆக்சிலேட்டரில் காலை வைத்துவிட்டார். இதனால் அந்த கார் மிக வேகமாக கிளம்பி அங்கு சாலையோரத்தில் இருந்த ஐஸ்க்ரீம் கடை மீது மோதியது. இதில் அந்த ஐஸ்க்ரீம் கடையில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டு கொண்டிருந்த 4 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளம்பெண்ணை கைது செய்தனர். இருப்பினும் அவர் தெரியாமல் செய்த தவறால் ஏற்பட்ட விபத்து என்பதால் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.