close
Choose your channels

திருமணத்தை திடீரென நிறுத்திய பிரபல நடிகை

Tuesday, September 11, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அர்ஜுன் ரெட்டி' பட புகழ் விஜய் தேவரகொண்டா நடித்த 'கீதா கோந்தம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரூ.100 கோடி வசூல் செய்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றி ரஷ்மிகாவுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்தபோதிலும் அவரது சொந்த வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய சோகம் ஏற்பட்டுள்ளது.

ஆம், நடிகை ரஷ்மிகாவிற்கும் கன்னட நடிகர் ரக்சித் ஷெட்டிக்கும் நடக்கவிருந்த திருமணம் திடீரென நின்றுவிட்டது. ஏற்கனவே இந்த திருமணம் நடக்காது என்று வதந்தி கிளம்பி வந்த நிலையில் தற்போது இந்த வதந்தி உண்மையாகிவிட்டதாக தெரிகிறது.

ரஷ்மிகா, ரக்சித் ஷெட்டி ஆகிய இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதுமட்டுமின்றி இருவரின் குடும்பத்திற்கு இடையிலும் சில பிரச்சனைகள் எழுந்துள்ளதாகவும், எனவே கனத்த இதயத்துடன் ரஷ்மிகா தனது திருமணத்தை நிறுத்த ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

கீதா கோவிந்தம்' படத்தை அடுத்து தற்போது ரஷ்மிகா விஜய் தேவரகொண்டாவுடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதுமட்டுமின்றி கன்னட மற்றும் தெலுங்கு திரையுலகில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருவதால் அவர் இன்னும் சில வருடங்களுக்கு சினிமாவில் மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.