close
Choose your channels

'வணங்கான்' படத்தில் மீண்டும் திருப்பம்.. 2டி நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு!

Monday, December 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வந்த ’வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென நேற்று இயக்குநர் பாலா இந்த படத்திலிருந்து சூர்யா விலகுவதாக அறிவித்து இருந்தார். அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ’வணங்கான்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த மாற்றங்களினால் இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமோ என்ற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.

என் மீதும், இந்த கதையின் மீது முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.

எனவே ’வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒரு முடிவு எடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம் தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது. ‘நந்தா’வில் நான் தான் பார்த்த சூர்யா, பிதாமகன் - இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி ’வணங்கான்’ பணிகள் தொடரும் என்று பாலா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பாலாவின் இந்த அறிக்கையை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கூறியிருப்பதாவது:

பாலா அண்ணாவின் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து
சூர்யா அவர்களும் #2D Entertainment நிறுவனமும் வணங்கான்-ல் இருந்து விலகிக்கொள்கிறோம். எப்போதும் பாலா அண்ணா உடன் துணை நிற்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.