2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,September 20 2017]

2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி இன்று மதியம் அறிவிக்கப்படும் என சிபிஐ நீதிமன்றம் இன்று காலை அறிவித்துள்ளது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அக்டோபர் 25ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டுள்ளர்.

மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2ஜி ஏலத்தில் ரூ.176,000 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கை அதிகாரி குற்றஞ்சாட்டியிருந்தார். இதன் அடிப்படையில் சிபிஐ நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இருவரும் சில மாதங்கள் கழித்து ஜாமீனில் வெளிவந்தனர்.

இந்த வழக்கு கடந்த ஆறு வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தற்போது தீர்ப்பு தேதி அக்டோபர் 25 என அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

விஜய் வேகத்துக்கு ஈடுகொடுக்க காஜல் செய்த தந்திரம்

தளபதி விஜய் படம் என்றாலே நடிப்பு, ஆக்சன், காமெடி, ரொமான்ஸ், என அனைத்தும் கலந்து ஒரு பொழுதுபோக்கு படத்திற்கு உத்தரவாதமாக இருக்கும்.

ராம்ரஹிம் சிங் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்: திடுக்கிடும் தகவல்

தேரா ஷச்சா ஆசிரமத்தின் சாமியார் ராம் ரஹிம் சிங் 30 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரது ஆசிரமத்தை கடந்த சில நாட்களாக போலீஸ் குழு ஒன்று ஆய்வு செய்து வந்தது.

'துப்பறிவாளர்' மிஷ்கினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இன்று வரை கண்டுபிடிக்க முடியாத ஒரு விஷயத்தை துப்பறிந்து அதில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்ற சினிமா துப்பறிவாளர்

பத்மபூஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார் 'தல'

'தல' என்று அன்புடன் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படும் தோனிக்கு பத்மவிருது அளிக்க வேண்டும் என பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. இந்த தகவலை பிசிசிஐ வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சமீபத்தில் சபாநாயகர் தனபால் அவர்கள் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர்களை தகுதிநீக்கம் செய்தார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்றது