கொரோனாவால் கடனில் தத்தளித்த இளைஞர்கள் திடீரென கோடீஸ்வரர்களாக மாறிய ஆச்சரியம்

துபாயில் பணிபுரிந்த மூன்று கேரள இளைஞர்கள் கொரோனா காரணமாக தொழிலில் நஷ்டம் ஆகி மீண்டும் கேரளா திரும்பலாம் என நினைத்த போது திடீரென அவர்கள் கோடீஸ்வரராக மாறிய சம்பவம் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

கேரளாவை சேர்ந்த ஜிஜேஷ், ஷாஜகான் மற்றும் ஷானோஜ் பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் துபாயில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் மூவரும் தவணை முறையில் சொகுசு காரை வாங்கி சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு கார் ஓட்டி சம்பாதித்து வந்தனர்.

இந்த நிலையில் திடீரென கொரோனா பிரச்சனை ஏற்பட்டதால் சுற்றுலாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை சுத்தமாக நின்றுவிட்டது. இதனால் காருக்காக வாங்கிய கடன் தவணை கட்ட முடியாமல் திண்டாடினர். இதனையடுத்து காரை விற்றுவிட்டு தவணையை செலுத்தி விட்டு நாடு திரும்பலாம் என முடிவு செய்தனர்.

இந்த நேரத்தில் திடீரென ஒரு போன் கால் வந்து அவர்களுடைய வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிட்டது. அந்த போன் காலில் மூவரும் சேர்ந்து வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூபாய் 41 கோடி ரூபாய் பரிசு விழுந்த தகவல் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து மகிழ்ச்சி அடைந்த மூவரும் தற்போது மீண்டும் தங்கள் தொழிலை தொடர முடிவு செய்துள்ளனர்.

காருக்கு வாங்கிய கடனை செலுத்த முடியாமல் தத்தளித்து நின்ற மூன்று இளைஞர்கள் தற்போது கோடீஸ்வரராக மாறிய சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

More News

மீண்டும் டாக்டர் தொழிலுக்கு திரும்பும் 'மிஸ் இங்கிலாந்து' பட்டம் வென்ற இந்திய பெண்

கடந்த 2019 ஆம் ஆண்டு 'மிஸ் இங்கிலாந்து' பட்டம் வென்ற இந்திய வம்சாவளி பெண் கடந்த சில மாதங்களாக டாக்டர் தொழிலை விட்ட நிலையில் தற்போது கொரோனா வைரஸ்

தொடரும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் சர்ச்சை!!!  

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மலேரியா நோய்க்கான மருந்துபொருளை ஏன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பரிந்துரைக்கிறார் என்பது குறித்து தற்போது அந்நாட்டில் கடும் சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் கடந்த சில வாரங்களாக மூடப்பட்டுள்ளன

கமல் லட்டரை படிச்சு முடிக்கிறதுக்குள்ள கொரோனாவே போயிடும்: பாஜக பிரபலம் கிண்டல்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார்.

ரெண்டு அப்பாவி பசங்கள ஏமாத்தியிருக்கேன்: விஜே மணிமேகலையின் வைரல் வீடியோ

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது முதல் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் முக்கிய நடிகர் நடிகைகள் பலர் தங்களது சமூக வலைதளங்களில் விளையாட்டுத்தனமான