கதவை மூடாமல் சென்ற காரின் ஓனர்: 3 சிறுமிகள் பரிதாப பலி!
Send us your feedback to audioarticles@vaarta.com
காரின் கதவை மூடாமல் சென்ற காரில் ஓனரால் மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா என்ற மாவட்டத்தில் ரெமல்லே என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு வந்த சிவப்பு கலர் கார் ஒன்றை நிறுத்திய காரின் ஓனர், காரின் கதவை கவனக்குறைவாக மூடாமல் சென்றுவிட்டார்
இந்த நிலையில் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 6 முதல் 8 வயது உள்ள மூன்று சிறுமிகள் காரின் கதவு திறந்து இருந்ததை பார்த்ததும் காரினுள் சென்று விளையாடினார்கள். மூன்று சிறுமிகளும் காரின் உள்ளே சென்றபோது காரின் கதவு ஆட்டோமேட்டிக் லாக் ஆகிவிட்டது. இதனை அடுத்து காரின் உள்ளே இருந்த சிறுமிகள் சிறுமிகள் மூச்சுத்திணறி பரிதாபமாக பலியாகினர்
விளையாடச் சென்ற குழந்தைகளைக் காணவில்லை என்று அறிந்த பெற்றோர்கள் குழந்தைகளை தேடியபோது காரின் உள்ளே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் விரைந்து வந்து காரின் கதவை திறந்து பார்த்த போது மூன்று குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். குழந்தைகளின் சடலங்களை பார்த்ததும் அவர்களது பெற்றோர்கள் கதறி அழுத காட்சி காண்போரை உருக வைத்தது
இதனை அடுத்து இது குறித்த முதல் கட்ட விசாரணையில் காரின் ஓனர் கவனக்குறைவாக காரின் கதவை மூடாமல் சென்றிருந்ததாகவும் மூன்று குழந்தைகளும் காரின் உள்ளே சென்றபின் ஆட்டோமெட்டிக் லாக் ஆகிவிட்டதாகவும் தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.