செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 3 பெரிய ஏரிகள்!!! இதனால் அங்கு உயிரினம் வாழமுடியுமா???

  • IndiaGlitz, [Wednesday,September 30 2020]

 

செவ்வாய் கிரகத்தில் உயிர்வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருக்கிறதா என்பதைக் குறித்து விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய ஆய்வுகளுக்காக பல நாடுகள் செவ்வாய் கிரகத்திற்கு சொந்தமாக செயற்கைக் கோள்களை அனுப்பவும் செய்திருக்கிறது. அப்படி அனுப்பப்பட்ட ஒரு செயற்கைக்கோள் கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் ஏரி ஒன்று இருப்பதை உறுதி செய்தது.

ஐரோப்பா விண்வெளி மையத்திற்கு சொந்தமான மார்க் எக்ஸ் எனும் விண்கலம் கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் 20 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஏரி இருப்பதை உறுதி செய்தது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்புகள் மெல்லிய வளி மண்டலத்தால் சூழப்பட்டது. இதனால் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியம் குறைவு என விஞ்ஞானிகள் இதுவரை நம்பி வந்தனர். இந்நிலையில் மார்க் எக்ஸ் சேகரித்த தரவுகளை அடிப்படையாக வைத்து அதன் அடிப்பரப்பில் திரவங்கள் இருப்பதற்கு சாத்திய இருக்கிறது என்பதை தற்போது விஞ்ஞானிகள் தெளிவுப்படுத்தினர்.

செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பது உறுதியான நிலையில் அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா என்பதைக் குறித்து அடுத்ததாக தீவிர ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இப்படி நடந்த ஆய்வுகளில் தற்போது 2010-2019 களுக்கு இடையில் 134 ரேடார் குறியீடுகளை மார்ஸ் எக்ஸ் சேகரித்து உள்ளது. இப்படி சேகரிப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தற்போது மேலும் செவ்வாய் கிரகத்தில் 3 ஏரிகள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து ஏரிகளும் அதிக உப்புத்தன்மை வாய்ந்தவை என்பதை விஞ்ஞானிகள் தெளிவுப்படுத்தி உள்ளனர். இதற்கு ஏரிகளிலுள்ள பனி உருவகுவதற்கு தேவையான வெப்பம் கிடைக்காததால் அங்கு காணப்படும் நீர் உப்புகளின் அதிக செறிவுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். செவ்வாய் கிரகத்தின் தென்துருவப் பகுதிகளில் நடந்து வரும் இந்த ஆய்வுகள் விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்த்தும் எனவும் நம்பப்படுகிறது.

More News

பொறுப்பற்ற செயலா? திட்டமிட்ட செயலா? பாபர் மசூதி தீர்ப்பு குறித்து கமல்ஹாசன்

கடந்த 1992ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் முன்னாள் துணை பிரதமர் எல்கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட

'பிக்பாஸ் 4' ஆரம்பிக்கும் நேரத்தில் திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறிய 'பிக்பாஸ் 3' போட்டியாளர்! 

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்னும் நான்கு நாட்களில் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் இதுகுறித்த புரமோக்கள், விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

தனிமையான வில்லா, நீச்சல்குளத்தில் மாளவிகா: வைரலாகும் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை மாளவிகா மோகனன், தற்போது தளபதி விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

கிரிக்கெட்டை அடுத்து சினிமா: தல தோனியின் அதிரடி முடிவு

சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தல தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்த தொடரில் அவர் தனது திறமையை மீண்டும் நிரூபிப்பார்

அரியர் மாணவர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கும் அறிவிப்பு!!! ஏஐசிடிஇ அதிரடி!!!

தமிழகத்தில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் அரியர் தேர்வுகளுக்கு, தேர்வு எழுதாமலே தேர்ச்சி வழங்கும் அறிவிப்பை தமிழக அரசு கடந்த மாதம் வெளியிட்டு இருந்தது.