close
Choose your channels

காருடன் சேர்த்து குழந்தையை எரித்து கொன்ற தந்தை! மனைவியை பழிவாங்க அரங்கேறிய கொடூரம்!

Thursday, May 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விவாகரத்தான தம்பதியினருக்கு இடையே குழந்தையை யார் வளர்ப்பது என நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் நிலையில், பெற்ற குழந்தை என்றும் பாராமல், தந்தை காருடன் எரித்து கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா, குயீன்ஸ் நகரை சேர்ந்த, செரோன் கோல்மன் என்ற பெண்ணுக்கும், மார்ட்டின் பெரைராவுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் ஆன நிலையில், அவர்களுக்கு ஸோயி என்கிற 3 வயது பெண் குழந்தை உள்ளது.

இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதனால் குழந்தையை யார் வளர்க்க வேண்டும் என இருவருக்குமிடையே நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்று நடைபெற்று வருகிறது. மேலும் மார்ட்டின் சில சமயங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொள்வதால், குழந்தையை தன்னிடம் ஒப்படைத்து விடுமாறு நீதிமன்றத்தில் செரோன் கூறியும் நீதிமன்றம் அவருடைய பேச்சை கண்டுகொள்ளாமல் குழந்தையை தந்தையிடம் ஒப்படைத்தது.

இந்நிலையில் திடீரென மார்ட்டின் கார் ஒரு ஏரியின் அருகே தீப்பிடித்து எரிவதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த காரில் மார்ட்டின் இல்லை. குழந்தை ஸோயி மற்றும் உடல் கருகிய நிலையில் உயிருடன் மீட்கப்பட்டார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றும், தீக்காயம் அதிகமாக இருந்ததால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து தீயணைப்பு துறையினர் கூறுகையில்... இது விபத்து போல் இல்லை என்றும், குழந்தையின் கை - கால்கள் பின் இருக்கையில் கட்டப்பட்டு இருந்ததாகவும், காரின் கதவுகளை யாரும் திறக்க கூடாது என்ற நோக்கில் சங்கிலியால் பூட்டப்பட்டு இருந்ததாகவும் கூறியுள்ளனர்.

அதேபோல் குழந்தையின் தாய் செரோன்னுக்கு, மார்ட்டின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இனி உன் குழந்தையை காண முடியாது என கூறி சிரித்ததாகவும், தன்னை பழிவாங்க மார்ட்டின் இப்படி குழந்தையை கொன்று விட்டதாக கூறியுள்ளார். இதை வைத்து இது திட்டமிட்டு தந்தையே தன் மகளை கொலை செய்துள்ளது தெரியவந்தது. எனவே போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக எடுத்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.