ஆட்சி அமைக்கும் எண்ணிக்கையை நெருங்கியது ஓபிஎஸ் அணி. மேலும் 30 எம்.எல்.ஏக்கள் ஆதரவு

  • IndiaGlitz, [Saturday,February 11 2017]

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சமீபத்தில் மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் தன்னந்தனியாக தொடங்கிய போராட்டம் தற்போது ஆச்சரியப்படும் வகையில் வலுபெற்று கிளைமாக்ஸை நெருங்கிவிட்டது.

ஒரே ஒரு எம்.எல்.ஏ ஆதரவுடன் துணிச்சலாகவும், நம்பிக்கையுடனும் களமிறங்கிய முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு மூத்த அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர் ஒவ்வொருவராக ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஏற்கனவே 39 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து இன்று மதியம் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் சற்றுமுன் நிலவரப்படி மேலும் 30 எம்.எல்.ஏக்கள் முதல்வருக்கு ஆதரவு கொடுத்துள்ளதாகவும், எனவே தற்போது முதல்வரையும் சேர்த்து 70 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ஆட்சி அமைக்க இன்னும் 48 எம்.எல்.ஏக்கள் மட்டுமே தேவை என்பதால் வெகுவிரைவில் அந்த நல்ல செய்தியும் வரும் என்று ஓபிஎஸ் அணியினர் நம்பிக்கையுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

ஓபிஎஸ் அணியில் மேலும் ஒரு அதிமுக மூத்த அமைச்சர்

தமிழக மக்களும் அதிமுக தொண்டர்களும் ஓட்டுமொத்தமாக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுத்து வரும் நிலையில் ஒருசில எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் ஆதரவை மட்டுமே வைத்துக்கொண்டுள்ள சசிகலா, தன்னை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருவதை தமிழக மக்கள் ஒரு வெறுப்புடனே பார்த்து வருகின்றனர்...

கூவத்தூரில் சசிகலா சிறைவைப்பா? பொதுமக்கள் கொந்தளிப்பு

சென்னை ஈசிஆர் அருகே உள்ள கூவத்தூர் சொகுசு ரிசார்ட் ஒன்றில் கடந்த நான்கு நாட்களாக அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ரிசார்ட்டை சுற்றிலும் சசிகலாவின் ஆட்கள் பாதுகாப்பில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர்களது அட்டூழியதால் அப்பகுதி கிராமத்து மக்கள் பெரும் பாதிப்பு அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது...

ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா உண்ணாவிரதமா? சென்னையில் பரபரப்பு

தமிழகத்தை ஆட்சி செய்வது யார் என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் கொண்ட ஆளுனர் வித்யாசாகர் ராவ், சென்னை வந்து இரண்டு நாட்கள் ஆகியும் எந்த முடிவையும் தெரிவிக்காமல் உள்ளார். நேற்று அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை செய்த அவர் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியதாக கூறப்பட்டு பின்னர் அது மறுக்கப்பட்டது...

சென்னையில் சுப்பிரமணியன் சுவாமி. ஆளுனரை சந்திக்கின்றாரா?

தமிழகத்தில் அரசியல் குழப்பங்கள் உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சென்னை வந்துள்ளார்...

ஆளுனர் மாளிகையை சுற்றி திடீர் போலீஸ் குவிப்பு

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருக்கும் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவருடன் செங்கோட்டையன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும் எம்.எல்.ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்...