close
Choose your channels

சென்னை, கோவை, செஞ்சி: மூன்று ஊர்களில் மூன்று திருமணம் செய்த பலே வாலிபர்

Tuesday, June 23, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சொந்த ஊரில் ஒரு திருமணமும், பின்னர் வேலை நிமித்தம் கோவை மற்றும் சென்னை சென்றபோது அங்கு இரண்டு திருமணமும் செய்துகொண்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செஞ்சியை சேர்ந்த வெங்கடேசன் என்ற 30 வயது வாலிபருக்கு ஐந்து வருடங்களுக்கு முன் அதே ஊரைச் சேர்ந்த வெண்ணிலா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. சில மாதங்கள் மனைவியிடம் குடித்தனம் நடத்திய வெங்கடேசன் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கோவைக்கு வேலை நிமித்தமாக செல்வதாக கூறி விட்டு சென்றார்.

கோவையில் வேலை பார்த்துக்கொண்டே கல்லூரியில் படித்து வந்த நந்தினி என்ற பெண்ணை காதலித்து, முதல் திருமணத்தை மறைத்து அவரையும் திருமணம் செய்து கொண்டார். அவருடன் சில ஆண்டுகள் குடும்பம் நடத்திய வெங்கடேசன் பின்னர் கோவையில் இருந்து சென்னைக்கு வேறு ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

இந்த நிலையில் சென்னையில் செவிலியராக வேலை பார்த்து வரும் காளீஸ்வரி என்ற பெண்ணையும் காதலித்து முதல் இரண்டு திருமணங்களை மறைத்து மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். தன்னை திருமணம் செய்தது மட்டுமின்றி கோவையில் ஒரு திருமணம், சென்னையில் ஒரு திருமணம் என வெங்கடேசன் அடித்த கூத்து முதல் மனைவி வெண்ணிலாவுக்கு தெரியவந்தது. இதனையடுத்து அவர் உடனடியாக மூன்றாவது மனைவி காளீஸ்வரி உடன் தொடர்பு கொண்டு தனது கணவரின் பித்தலாட்டங்கள் குறித்து கூறியுள்ளார்.

ஆனால் காளீஸ்வரி அதனை நம்பாமல் தனது கணவர் வெங்கடேசன் நல்லவர் என்றும் வாழ்ந்தால் அவருடன்தான் வாழ்வேன் என்று பிடிவாதமாகக் கூறி உள்ளார். இதனை அடுத்து செஞ்சி மகளிர் காவல் நிலையத்தில் வெண்ணிலா புகார் கொடுத்ததை அடுத்து வெங்கடேசனை விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். மூன்று ஊர்களில் 3 திருமணம் செய்த வாலிபரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.