close
Choose your channels

3 மடங்கு லாபம் கொடுத்த சூப்பர்ஹிட் படம்: ஷங்கருக்கு நன்றி சொன்ன சரத்குமார்!

Sunday, August 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சரத்குமார் நடித்த சூப்பர்ஹிட் படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் ஆனதை அடுத்து அந்த படத்தின் மலரும் நினைவுகளை பகிர்ந்து உள்ள நடிகர் சரத்குமார், இயக்குனர் ஷங்கர் உள்பட படக்குழுவினர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்

சரத்குமார் நடிப்பில் பவித்ரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’சூரியன்’. இந்த திரைப்படம் கடந்த 1992ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி வெளியானது. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கேடி குஞ்சுமொன் தயாரித்த நிலையில் இந்த படம் அவருக்கு மூன்று மடங்கு லாபத்தை சம்பாதித்து கொடுத்ததாக செய்திகள் வெளியானது

மேலும் இந்த படத்தில்தான் ஷங்கர் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் என்பதும், நடிகை ரோஜாவின் இரண்டாவது படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இன்றுடன் ’சூரியன்’ திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆனதை அடுத்து நடிகர் சரத்குமார் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் படக்குழுவினர்களுக்கு இந்த படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஷங்கருக்கு நன்றி கூறி பதிவுசெய்துள்ளார். அந்தப் பதவியில் அவர் கூறியிருப்பதாவது:

கடின உழைப்பு மற்றும் டீம் வொர்க்கை ரசிகர்கள் கண்டிப்பாக பாராட்டுவார்கள் என்பதை இந்திய அளவில் நிரூபித்த படம் ’சூரியன்’. இந்தப் படம் பல மகிழ்ச்சியான தருணங்களை நினைவுக்கு கொண்டு வந்துள்ளது. இந்தப் படத்தை தயாரித்த கேடி குஞ்சுமோன், இயக்குநர் பவித்ரன், இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர்களுக்கு எனது நன்றி. மேலும் படத்தின் கேமராமேனாக பணியாற்றிய மறைந்த அசோக் குமார், ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் மற்றும் இசையமைப்பாளர் தேவாவிற்கும் எனது நன்றி’ என கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.