காமக்கொடூரன் கையில் மாட்டிய 300 குழந்தைகள்!!! ஆண்டுக் கணக்கில் தொடர்ந்த அவலம்!!!

  • IndiaGlitz, [Friday,July 10 2020]

 

இந்தோனேஷியா தலைநகர் ஜகர்த்தாவில் 300 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வன்கொடுமை செய்ததாக ஒருவர் கைது செய்யப் பட்டு இருக்கிறார். பிராங்கோயில் கமிலி அபல்லோ என்ற பெயருடைய 65 வயது முதியவர் குழந்தைகளிடம் ஆசையாக பேசி அவர்களை மயக்கி தகாத செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஜகர்த்தாவில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் அபல்லாவை கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்து நூற்றுக் கணக்கான சீடிக்களையும் பறிமுதல் செய்து இருக்கின்றனர்.

குழந்தைகளிடம் வலிய பேசி அவர்களை அழைத்துச் சென்று தகாத செயலில் ஈடுபட்டதாகவும் அவருடய ஆசைக்கு இணங்காத குழந்தைகளை அடித்துத் துன்புறுத்தியதாகவும் தற்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவருடைய தகாத செயலால் சில குழந்தைகள் கொலை கூட செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் தற்போது அந்நாட்டு காவல் துறையினர் வெளிப்படுத்தி இருக்கின்றனர். மேலும் இந்த முதியவர் பல முறை சுற்றுலா விசாவை வைத்துக்கொண்டு தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணப்பட்டு இருக்கிறார். அந்த இடங்களிலும் இதுபோன்ற குற்றங்கள் நடைபெற்று இருக்குமா என்ற சந்தேகமும் எழுப்பப் பட்டு இருக்கிறது.

குழந்தைகளிடம் நல்லவராக நடித்து இப்படி தகாத செயலில் ஈடுபடும் இந்த முதியவர் குற்றம் வெளியே தெரியாமல் இருக்க குழந்தைகளுக்கு பணத்தையும் கொடுத்து இருக்கிறார். 25 ஆயிரம் ரூபியா முதல் 1 மில்லியன் ரூபியா வரையிலும் குழந்தைகளுக்கு கொடுத்ததாக விசாரணையில் முதியவர் ஒப்புக்கொண்டார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.1250-1500 வரை. டாலரில் 17-20 டாலர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் 10 முதல் 17 வயதுடைய சிறுமிகளையே இவர் தேர்ந்தெடுத்தாகவும் விசாரணையில் தெரிய வந்து இருக்கிறது. இதுவரை 300 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப் பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஆசைக்கு இணங்காத குழந்தைகளை அவர் பல நேரங்களில் அடித்துத் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பல குழந்தைகள் உயிரிழந்து இருக்குமோ என்ற சந்தேகமும் வலுத்து வருகிறது.

பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த குற்றவழக்கிற்கு அந்நாட்டு சட்டப்படி மரணத் தண்டனை கிடைக்கும் என்று சிலர் கருத்துத் தெரிவித்து உள்ளனர். இந்த வழக்கு குழந்தைகள் நல பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. போலீஸார் அவரை கைது செய்யும் போது அறையில் இருந்து 2 குழந்தைகள் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

More News

என்கவுண்டர் செய்யப்பட்ட விகாஸ் துபேவின் குற்றப் பட்டியல்!!! ஒளிந்து கிடக்கும் ரகசியங்கள்!!!

போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட 8 பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் முக்கியக் குற்றவாளியான விகாஸ் துபேவை பற்றித்தான் தற்போது இந்தியா முழுக்க பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

அதிகரித்து வரும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை: கொரோனாவில் இருந்து மீள்கிறதா தமிழகம்?

தமிழ்நாட்டில் இன்று 3680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் சென்னையில் மட்டும் இன்று 1205 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும்

'செம்பருத்தி' படப்பிடிப்பு: முதல் நாளிலேயே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கார்த்திக்-ஷபானா

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'செம்பருத்தி' சீரியல் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது என்பதும் குறிப்பாக பெண்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு பெரும் வரவேற்பு உள்ளது என்பதும் தெரிந்ததே 

கட்டிலுக்கு மேலே கணவன், கீழே 3 நாட்களாக பிணமாக மனைவி: போலீசாரை அதிர வைத்த சம்பவம்

கட்டிலுக்குக் கீழே மனைவி பிணமாக இருக்கும் நிலையில் கட்டிலுக்கு மேலே கணவர் மூன்று நாட்கள் படுத்து தூங்கிய சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

ரகசியத்தை வெளியிட்ட பிக்பாஸ் ரம்யா: வைரலாகும் புகைப்படம்

பிரபல பின்னணி பாடகியும், கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் அவர்களின் பேத்தியுமான ரம்யா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் தமிழகம் முழுவதும் புகழ் பெற்றார் என்பது தெரிந்ததே