close
Choose your channels

13 வயது சிறுவனை 2 வருடங்களாக பாலியல் டார்ச்சர் செய்த 31 வயது பெண்: போக்சோவில் கைது! 

Monday, August 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

13 வயது சிறுவனை இரண்டு வருடங்களாக 31 வயது விதவை பெண் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் அந்த பெண்ணை கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த 31 வயது பெண் ஒருவரின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பெண்ணின் வீட்டில் இருந்த மாமரத்தின் மீது கல்லெறிந்து உள்ளான். இதனால் அந்தப் பெண்ணின் வீட்டில் உள்ள ஜன்னல் கண்ணாடி உடைந்து உள்ளது.

இதனை அடுத்து அந்த சிறுவனை அழைத்து மிரட்டிய அந்த பெண் 2000 ரூபாய் ஜன்னல் கதவுகள் சேதத்திற்கு எடுத்து வா என்று மிரட்டியுள்ளார். இதனையடுத்து அந்த சிறுவன் வீட்டிற்கு தெரியாமல் 2000 ரூபாய் திருடி அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளான். இதேபோல் பல முறை பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் அந்த சிறுவனை பாலியல் தொல்லை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வீட்டில் அடிக்கடி பணம் திருடு போனதால் சிறுவனின் வீட்டில் உள்ளவர்கள் சிறுவனை பிடித்து விசாரித்தபோது, ஒரு கட்டத்தில் அழுது கொண்டே சிறுவன் உண்மையைச் சொல்லிவிட்டான். இதன் பின்னர் போலீசில் சிறுவனின் பெற்றோர் புகார் செய்துள்ளனர். அப்போது கடந்த இரண்டு வருடங்களாக அதாவது சிறுவன் 11 வயதாக இருக்கும்போதில் இருந்தே அந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதனை அடுத்து அந்தப் பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 13 வயது சிறுவனை கடந்த இரண்டு வருடங்களாக 31 வயது பெண் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் சிவகங்கை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.