சீன ராணுவத்தினரின் பலி எண்ணிக்கை எவ்வளவு? அமெரிக்க உளவுத்துறையின் தகவலால் பெரும் பரபரப்பு 

இந்தியா சீன ராணுவ வீரர்கள் இடையே நேற்று முன்தினம் நள்ளிரவு லடாக் பகுதியில் உள்ள கால்வான் என்ற இடத்தில் நடந்த மோதல் உலக நாடுகளையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய சீன எல்லையில் நடந்த இந்த மோதல் காரணமாக இந்திய, சீன எல்லையில் பெரும் பதட்டம் ஏற்பட்டு போர் மேகங்கள் சூழ்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த இந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்பதும் இன்னும் பலர் படுகாயமடைந்துள்ளனர் என்பதும் அவர்களில் 4 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

அதே நேரத்தில் சீன தரப்பிலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளதாகவும் ஆனால் சீனாவின் உயிரிழப்பு குறித்து சீன ராணுவம் இதுவரை அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்திய சீன வீரர்கள் இடையிலான மோதலில் சீன தரப்பில் 35 பேர் வரை உயிரிழந்தனர் என்ற தகவலை சற்றுமுன் அமெரிக்க உளவுத்துறை வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அதுமட்டுமின்றி உயிரிழந்த சீன வீரர்களில் சீன ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் என்றும் அமெரிக்க உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. சீன வீரர்கள் உயிரிழப்பு குறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரபூர்வ தகவலையும் சீனா அறிவிக்காத நிலையில் அமெரிக்க உளவுத்துறை அறிவித்த இந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

More News

சீனாவை அடுத்து பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியாவை சுற்றி வளைக்கும் அண்டை நாடுகள்

நேற்று முன்தினம் நள்ளிரவு லடாக் எல்லையில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 43 வீரர்கள் பலியாகி

அணுஆயுதம் அதிகமாக வைத்திருக்கும் நாடு: சீனாவா??? இந்தியாவா???

உலக நாடுகளிடையே அணு ஆயுதச் சோதனைகள் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலைமையாகப் பார்க்கப்பட்டாலும் ஒவ்வொரு நாடும் தங்களது ஆயுதப் படைகளை வலுப்படுத்திக் கொண்டே வருகின்றன

என்னால ஏசி இல்லாம இருக்க முடியாது: கொரோன டெஸ்ட் எடுக்க டிக்டாக் பிரபலத்தால் பரபரப்பு

நான் சிங்கப்பூரில் ஏசியில் இருந்து பழகி விட்டதால் என்னால் சாதாரண அறையில் டெஸ்ட் எடுக்க வர முடியாது என்றும், சிறப்பு அறை வேண்டும், தனிமைப்படுத்தப்பட்டால்,

சுஷாந்த்சிங் மரணம்: பாலிவுட்டை மறைமுகமாக தாக்கினாரா ஏ.ஆர்.ரஹ்மான்?

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட் திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது என்பது தெரிந்ததே

குளிக்கும்போது ஆபாசப்படம் எடுத்ததால் தீக்குளித்த 10ஆம் வகுப்பு மாணவி மரணம்

வேலூரில் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் குளிக்கும் போது மறைந்திருந்து வீடியோ எடுத்த 3 இளைஞர்கள் அவரை மிரட்டியதால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி தீக்குளித்த சம்பவம் குறித்த செய்தியை நேற்று பார்த்தோம்.