35 வயது இளம் நடிகர் கொரோனாவுக்கு பலி: அதிர்ச்சியில் திரையுலகம்!

  • IndiaGlitz, [Wednesday,April 21 2021]

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் சுமார் 3 லட்சம் பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவுக்கு அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முதலமைச்சர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதையும் அதே போல் திரையுலகைச் சேர்ந்த பலரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தமிழக திரையுலகை பொறுத்தவரை பல திரையுலக பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பதும் எஸ்பிபி உள்பட ஒரு சிலர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி கன்னட திரையுலகின் இளம் நடிகர் மஞ்சுநாத் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்யுக்தா 2’, ‘கெமிஸ்ட்ரி ஆஃப் கரியப்பா’ உள்பட ஒருசில படங்களில் நடித்த இவர் ’ஜீரோ பர்சண்ட் லவ்’ என்ற படத்தை தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்து வந்தார். இந்த படம் இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாக இருக்கும் நிலையில் திடீரென அவர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம் நடிகர் மஞ்சுநாத் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.