close
Choose your channels

சட்டக்கல்லூரி மாணவி கேரக்டரில் 36 வயது நடிகை.. அதுவும் 50 வது படத்தில்..!

Monday, May 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் பிரபல நடிகை தனது 50வது படத்தில் சட்டக் கல்லூரி மாணவியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவர் அஞ்சலி என்பதும் அவரது 50 வது படத்தின் டைட்டில் சமீபத்தில் வெளியானது என்பதும் அந்த படத்திற்கு 'ஈகை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டது என்பதையும் பார்த்தோம். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலையில் தற்போது இந்த படத்தின் இயக்குனர் அசோக் வேலாயுதம், இந்த படம் குறித்த சில தகவல்களை தெரிவித்துள்ளார்.

'ஈகை’ திரைப்படம் ஒரு துப்பறியும் திரில்லர் கதையம்சம் கொண்டது என்றும் சமூகத்தில் உள்ள ஒரு முக்கிய பிரச்சனையை அலசி அதற்கான தீர்வை தரும் கதை தான் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் அஞ்சலி சட்டக் கல்லூரி மாணவியாக நடித்துள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 9 முதல் தொடங்க இருப்பதாகவும் பெரும்பாலான படப்பிடிப்பு சென்னை மற்றும் தாராவியில் நடைபெற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் அஞ்சலிக்கு ஜோடியாக காஷ்யப் என்பவர் நடித்து வருவதாகவும் அவர் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்து வருவதாகவும் இயக்குனர் அசோக் வேலாயுதம் தெரிவித்துள்ளார். மேலும் ’புஷ்பா’ படத்தில் நடித்த சுனில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாகவும் அதுமட்டுமின்றி பாரதிராஜா, குக் வித் கோமாளி புகழ், ஹரி, அபி நட்சத்திரா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதர் ஒளிப்பதிவில் தரண் குமார் இசையில் உருவாகி வரும் இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரவு மொழிகளில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 36 வயதான அஞ்சலி தனது 50வது படத்தில் சட்டக் கல்லூரி மாணவியாக நடித்து வரும் நிலையில் இந்த படம் வெற்றி படமாக மாறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.