மீண்டும் 4000க்குள் வந்த தமிழக கொரோனா பாதிப்பு: சென்னையில் எவ்வளவு?

தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு 4000ஐ தாண்டிய நிலையில் இன்று 4000க்கும் குறைவாகவே பாதிப்பு அடைந்துள்ளது சற்று நிம்மதியை அளித்துள்ளது. அதேபோல் சென்னையிலும் கடந்த இரண்டு நாட்களாக 2000க்கும் குறைவாக இருந்த நிலையில் இன்றும் 2000க்கும் குறைவாகவே உள்ளது.

இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறையின் தகவலின்படி தமிழகத்தில் இன்று 3827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,14,978 என அதிகரித்துள்ளது.

மேலும் சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 1,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதனையடுத்து சென்னையில் மொத்தம் 70,017 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவால் 61 பேர் மரணம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,571 ஆக அதிகரித்துள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி ஆகும்.

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 3,793 பேர் குணமடைந்துள்ளனர் என்பது தான் ஒரே ஆறுதல் என்பதும், இதனையடுத்து பேர் மொத்தம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 66,571 பேர்கள் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று 34,782 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் 13,76,497 பேர்களுக்கு மொத்தம் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

More News

வீழ்வேனென்று நினைத்தாயோ! சென்னைக்கு கம்பீரமாக குரல் கொடுத்த பார்த்திபன்

வந்தாரை வாழவைக்கும் சென்னை தற்போது கொரோனா வைரஸால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்பதும், சென்னையில் சுமார் 2000 பேர் தினமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பதால்

மைலாப்பூர் ஜன்னல் கடை பஜ்ஜி உரிமையாளர் கொரோனாவுக்கு பலி!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்ட இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அல்வா பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நடுக்காட்டில் விடியவிடிய இளம்பெண்ணுடன் 'பேசி' கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

25 வயது இளம்பெண் ஒருவருடன் காட்டுப்பகுதியில் நள்ளிரவு முதல் விடிய விடிய பேசிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் சஸ்பெண்ட் ஆகி இருப்பது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஊரடங்கில் ஊரையே நடுங்க வைத்த சூரி! வைரலாகும் புகைப்படங்கள்

இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் நடிகர் நடிகைகள் பலர் தங்களது சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அட்டகாசமாக வெளியிட்டு வருகின்றனர்

எல்லை மீறி போகும் திருமண போட்டோகிராபி: வைரலாகும் புகைப்படங்கள்

ஒவ்வொரு மனிதனின் வாழ்வில் திருமணம் என்பது மறக்க முடியாத நிகழ்வு என்பதும் ஒரே ஒரு முறை மட்டுமே நிகழும் இந்த நிகழ்வை காலம் முழுவதும் ஞாபகம் வைத்துக் கொள்வதற்காக புகைப்படங்கள்