90 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு 3000க்கும் அதிகமாக இருந்து வரும் நிலையில் இன்றும் 3000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது

தமிழக சுகாதாரத்துறையின் தகவலின்படி தமிழகத்தில் இன்று 3943 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,167 என அதிகரித்துள்ளது.

மேலும் சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 2393 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதனையடுத்து சென்னையில் மொத்தம் 58,327 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவால் 60 பேர் மரணம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1201ஆக அதிகரித்துள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி ஆகும்.

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2325 பேர் குணமடைந்துள்ளனர் என்பது தான் ஒரே ஆறுதல் என்பதும், இதனையடுத்து பேர் மொத்தம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 50,074 பேர்கள் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழகத்தில் இன்று 30,242 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 11,70,683 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

More News

உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா உறுதி: மருத்துவமனையின் அறிக்கை

தமிழகத்திலும் தலைநகர் சென்னையிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள்

என் மனைவி குங்குமம் வைச்சிக்க விரும்பல... வளையல் போட்டுக்க மறுக்கிறா???அதனால விவாகரத்து கொடுத்துடுங்க...

உலகம் முழுவதும் பெண்ணிற்கு அழகு இதுதான் என ஒவ்வொரு மதக் கலாச்சாரமும் சில விதிமுறைகளை வகுத்து வைத்திருக்கிறது.

தனுஷின் 'ஜகமே தந்திரம்' படம் குறித்த ஒரு ஆச்சரிய அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள 'ஜகமே தந்திரம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள்

ஊரடங்கு சமயத்தில் பசியால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை: பிரதமர் மோடி 

பிரதமர் மோடி இன்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் அவர் பேசியதன் சாரம்சம்

என் கணவர் இருக்கும்போது கொரோனா என்னை என்ன செய்துவிடும்? கொரோனாவுக்கு பலியான சென்னை பெண்

சென்னையைச் சேர்ந்த அரியநாயகி என்ற பெண் கடந்த 1991ம் ஆண்டு அலெக்ஸ் என்பவரை சந்தித்து அவருடன் காதல் ஏற்பட்டதால் அதன்பின் மூன்று வருட காத்திருப்பிற்குப் பின் குடும்பத்தினர்களின் சம்மதத்துடன் திருமணம்