மற்றொரு விஷவாயுக்கசிவு சம்பவம்… 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு!!!

  • IndiaGlitz, [Thursday,January 07 2021]

 

ஒடிசா மாநிலத்தின் ரூர்கேலா உருக்காலை நிறுவனத்தில் நேற்றுக் காலை பயங்கர விஷவாயு கசிவு ஏற்பட்டு உள்ளது. இந்த விபத்தில் 4 ஊழியர்கள் உயிரிழந்து உள்ளனர். மேலும் 6 பேர் படுகாயத்துடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. பொதுத்துறை நிறுவனமான இந்திய உருக்காலை ஆணையத்தின்கீழ் இயங்கி வரும் ரூர்கேலா (செயின்) நிறுவனத்தில்தான் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.

உருக்காலையில் ஸ்டார்கன்ஸ்ட்ரக் ஷன் எனும் தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் நேற்று காலை பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தபோது விஷவாயு கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி 4 தொழிலாளர்கள் உயிரிழந்ததோடு மேலும் 6 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் உருக்காலையில் எதனால் விபத்து ஏற்பட்டது என்பது குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த உயிரிழப்புக்கு அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தனது டிவிட்டரில் வருத்தம் தெரிவித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

100% இருக்கைகள் அனுமதியை எதிர்த்து வழக்கு: விசாரணை எப்போது?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது என்பது தெரிந்ததே

பிரபல தமிழ் நடிகைக்கு இன்றிரவு ரகசிய திருமணமா?

பிரபுசாலமன் இயக்கிய 'கயல்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஆனந்தி. இந்த படத்தின் வெற்றியை அடுத்து இவர் 'கயல் ஆனந்தி' என்றே அழைக்கப்பட்டு வருகிறார் 

பள்ளி திறந்து சில தினங்களில் எகிறிய கொரோனா பாதிப்பு… மீண்டும் விடுமுறை!!!

கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு கல்வி நிறுவனங்களின் நடைமுறை பெரும் அளவிற்கு மாறிவிட்டது.

ஐந்தாவது சுற்று முடிவில் யார் யாருக்கு எத்தனை புள்ளிகள்!

பிக்பாஸ் வீட்டில் நடைபெற்று வரும் ஃபினாலே டாஸ்க்கில் ஏற்கனவே 4 சுற்றுகள் முடிந்துள்ள நிலையில் இன்று நடைபெற்ற ஐந்தாவது சுற்றில் ரியோ வெற்றி பெற்றதால் அவருக்கு 7 புள்ளிகள் கிடைத்தது

அந்த டாக்டர் ஏன் இவர்களுக்கெல்லாம் லட்டர் எழுதவில்லை? 'காட்டேரி' இயக்குனர் கேள்வி

பொங்கல் தினத்தில் தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' மற்றும் சிம்புவின் 'ஈஸ்வரன்' ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க தமிழக அரசு அரசாணை