close
Choose your channels

4 ஆண்டுகளை கடந்தும்… சிறந்த ஆட்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு என இபிஎஸ்க்கு பாராட்டு!

Thursday, March 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மறைவிக்கு பிறகு அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் சேர்ந்து ஒருமனதாக எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுத்தனர். இந்த அறிவிப்பை தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை தமிழகத்திற்கு அளித்து வருகிறார். மேலும் இதற்கு நடுவில் பல்வேறு இன்னல்கள் முளைத்தபோதும் சளைக்காமல் அனைத்து சிக்கல்களையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்கொண்டார்.

தற்போது வரும் சட்டச்சபைத் தேர்தலுக்கும் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் வரும் தேர்தலிலும் அதிமுக வெற்றிப் பெற்றுவிட்டால் 3 ஆவது முறையாக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் கட்சி என அந்தஸ்தை பெற்று விடும். அதோடு அதிமுகவை எதிர்க்கும் சக்தி வேறு எந்த அரசியல் கட்சிக்கும் இல்லாமல் போய்விடும்.

இதனால் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் இணைந்து கட்சி அறிவிக்கும் தொண்டர்களை வெற்றிபெற செய்யவேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடைபெறும் முதல்வர் தேர்தல் என்பதால் பல்வேறு சதித்திட்டங்கள் முளைத்த வண்ணம் உள்ளன. அதைனை முறியடித்த முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். இதனால் அவருக்கு பாராட்டுகளை குவிந்த வண்ணம் உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.