close
Choose your channels

கொரோனா தாக்கத்தால் 40 கோடி இந்தியர்கள் வறுமையின் பிடியில் சிக்கும் அபாயம்!!! ILO தலைமை இயக்குநர்!!!

Thursday, April 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா தாக்கத்தால் 40 கோடி இந்தியர்கள் வறுமையின் பிடியில் சிக்கும் அபாயம்!!! ILO தலைமை இயக்குநர்!!!

 

கொரோனா தாக்கத்தால் உலகம் முழுவதும் 200 மில்லியன் வேலையிழப்புகள் ஏற்படக்கூடும் என ஐ.நா. சபையின் ஓர் அங்கமாக விளங்கும் சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பின் (ILO) தலைமை இயக்குநர் கெய் ரைடர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா SARS-Covid-2 பரவலின் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம், கடும் வீழ்ச்சியைச் சந்தித்து இருக்கிறது.  இதற்கு முன்னர் உலகளவில் நிலவிய கடும் நெருக்கடி ஆண்டான 2008-2009 ஐ விட தற்போது உலகப் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். அடுத்த 3 மாதங்களில் 200 மில்லியன் தொழிலாளர்கள் தங்களது முழுநேர வேலைவாய்ப்பை இழக்கப்போகிறார்கள், இந்த வேலையிழப்பு கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்துளளார்.

25 மில்லியன் அளவிலான வேலை வாய்ப்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக (ILO) கணக்கிட்டு இருக்கிறது. இந்த அளவீடு என்பது உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2.7 பில்லியன் தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தவினால் வீடுகளில் முடங்கியுள்ளனர் என்பதற்கு சமமாகும். கொரோனா பாதிப்பு அதிகப்படுவதற்கு முன்பே உலகம் முழுவதும் வேலையின்மை 190 மில்லியனாக இருந்தது என ஜெனீவாவில் நடந்த வீடியோ காணொலி மூலம் (ILO) தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் நான்கு முக்கிய துறைகளின் தொழிலாளர்கள் உலகம் முழுவதும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். உணவும் மற்றும் தங்கும் இடங்களில் வேலைப்பார்ப்பவர்கள் (144 மில்லியன் தொழிலாளர்கள்), சில்லறை மற்றும் மொத்த விற்பனையாளர்கள் (482 மில்லியன்), வணிக சேவைகள் மற்றும் நிர்வாகம் (157 மில்லியன்), உற்பத்தி (463 மில்லியன்) எனக் கணிக்கப்பட்டு இருக்கிறது.

முழுநேரத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயத்தில் ஐரோப்பா மற்றும் அரபு நாடுகள் சந்தித்து வருகிறது. மேலும், உலகம் முழுவதும் 2 மில்லியன் மக்கள் அமைப்புசாரா தொழிலாளர்களாக வேலைசெய்து வருகின்றனர். நகர்ப்புறத் துப்புரவு துறைகளில் வேலைப்பார்ப்பவர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழில்களை செய்துவரும் அன்றாட மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலைமை தற்போதே ஆரம்பித்து விட்டது.

இந்தியாவில் முறைசாராத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகம் எனவும் அவர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்யவேண்டியது அவசியம் எனவும் குறிப்பிட்டு பேசியுள்ளார். இந்தியாவில் 40 கோடி அமைப்புச்சாராத் தொழிலாளர்கள் வறுமையின் பிடியில் சிக்கும் அபாயநிலைக்குத் தள்ளப்படலாம். ஊரடங்கு காலங்களில் இந்தியா, நைஜீரியா, பிரேசில் ஆகிய நாடுகளின் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் இதற்குத் தேவையான ஏற்பாடுகள் இல்லையென்றால் அதிக ஆபத்துக்களை சந்திக்க வேண்டிவரும் எனவும் தெரிவித்துள்ளார். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.