close
Choose your channels

ஒரே தெருவில் நேற்று 19, இன்று 40: சென்னையில் கோரத்தாண்டவமாடும் கொரோனா

Saturday, May 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியின் ஒரே தெருவில் 19 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்று ஒரு தகவல் உறுதி செய்த நிலையில் இன்று அதே தெருவில் 40 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள வி.ஆர்.பிள்ளை என்ற தெருவில் நேற்று 19 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதே தெருவில் மேலும் 21 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னை திருவல்லிக்கேணியில் விஆர் பிள்ளை தெருவில் 40 பேருக்கு கொரோனா இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது

ஏற்கனவே கோயம்பேடு மார்க்கெட் சென்று வந்தவர்கள் 50க்கும் மேற்பட்டோர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது ஐஸ் ஹவுஸ் பகுதியிலும் கொரோனா மிக வேகமாக பரவி வருவதால் கொரோனா தொற்றும் மையமாக சென்னை மாறியுள்ளதோ என்ற அச்சம் சென்னை பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.