வாக்கிங் சென்ற இந்திய பெண் ஆராய்ச்சியாளர் படுகொலை: அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

  • IndiaGlitz, [Wednesday,August 05 2020]

அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் புற்றுநோய் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர் கடந்த 1ஆம் தேதி வாக்கிங் சென்றபோது படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சர்மிஸ்தா சென் என்ற 43 வயது பெண் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் இருந்து வருகிறார். திருமணமாகி இரண்டு மகன்களுக்கு தாயான இவர் அமெரிக்காவில் புற்றுநோய்க்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி அதிகாலையில் வாக்கிங் சென்றவர் வீடு திரும்பவில்லை என தெரிகிறது. இதனை அடுத்து அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் செய்ததையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் அவர் சிஸ்லோம் டிரையல் பார்க் என்ற பகுதியில் அவர் சடலமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனை செய்ததில் அவர் பலமுறை கடுமையாக தாக்கி கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கொலை நடந்த அதே பகுதியில் அதே நேரத்தில் ஒரு கொள்ளை சம்பவம் நடந்ததாகவும் இது தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த இளைஞருக்கும் சென் கொலைக்கும் சம்பந்தம் இருக்கிறதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் வாக்கிங் சென்ற இந்திய பெண் ஆராய்ச்சியாளர் ஆராய்ச்சியாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

தமிழ் மாணவர்களுக்காக தனி விமானம் ஏற்பாடு செய்த சோனு சூட்: ஆச்சரிய தகவல்

திரையில் வில்லன் நடிகராக இருந்தாலும் நிஜத்தில் தற்போது ஹீரோவாக மாறி விட்டார் நடிகர் சோனு சூட் என்பதை பல நிகழ்வுகளின் மூலம் பார்த்தோம்

கொரோனா கற்றுத்தந்தது என்னென்ன? பிரபல இயக்குனரின் டுவீட்

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில் கொரோனா வைரஸால் வைரஸிடம் சிக்கி மனித இனமே தவித்து வருகிறது

காதலிக்கு சர்பரைஸ் கொடுக்க நினைத்து வீட்டையே கொளுத்திய இளைஞர்!!! சுவாரசியத் தகவல்!!!

இங்கிலாந்தின் தெற்கு யார்க்க்ஷர் மாகாணத்தின்  அபேடலி பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்த ஒரு இளைஞர் தனது காதலிக்கு சர்பரைஸ் கொடுத்து லவ் பிரபோஸ் செய்ய நினைத்திருக்கிறார்.

லெபனானில் வெடித்து சிதறிய 2,750 டன் அமோனியம் நைட்ரேட்!!! பரபரப்புச் சம்பவம்!!!

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டின் அருகேயுள்ள துறைமுகத்தில் ஏற்ட்ட ஒரு வெடிவிபத்தால் ஒட்டுமொத்த தலைநகரும் தற்போது ஆரஞ்சு நிறத்தில் காட்சியளிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா தனிமை: பிரத்யேக முறையில் அம்மா கோவிட்-19 திட்டத்தைத் துவக்கி வைத்த தமிழக முதல்வர்!!!

தமிழகத்தில் கடந்த ஜுலை மாதத்தைவிட கொரோனாவில் இருந்து குணமடைவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது