close
Choose your channels

25 வயது இளம்பெண்ணுடன் திருமணம்: 45 வயது விவசாயிக்கு ஏற்பட்ட பரிதாப முடிவு!

Wednesday, April 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

25 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 45 வயது விவசாயிக்கு ஏற்பட்ட பரிதாப முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி சங்கரண்ணா என்ற 45 வயது விவசாயி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கணவரால் கைவிடப்பட்ட மேகனா என்ற 25 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சங்கரண்ணா வயதான தோற்றம் உடையவராக இருந்ததாலும் சங்கரண்ணா-மேகனா தம்பதிகள் சந்தொஷ்மாக வாழ்ந்தனர். அவர்களது திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ஆனது

இந்த நிலையில் மேகனா 4 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் மேகனாவுக்கும் சங்கரண்ணாவின் தாய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மேகனா தனிக்குடித்தனம் செல்லலாம் என்று கணவரிடம் கூறியுள்ளார். ஆனால் தாயை பிரிந்து வரமாட்டேன் என உறுதியாக சங்கரண்ணா கூறியதால் ஒரு கட்டத்தில் கணவரிடமே மேகனா சண்டை போட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட சங்கரண்ணா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் தனது மகனின் தற்கொலைக்கு மேகனா தான் காரணம் என சங்கரண்ணாவின் தாய் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos