close
Choose your channels

தமிழகத்தில் இன்று அதிகபட்ச கொரோனா பாதிப்பு: வழக்கம்போல் குறையும் சென்னை

Tuesday, July 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை சென்னையில் மட்டுமே அதிகமான கொரோனா பாதிப்பு இருந்தது. மற்ற மாவட்டங்களில் வெறும் ஒற்றை, இரட்டை இலக்கங்களில் மட்டுமே பாதிப்பு இருந்தது. ஆனால் தற்போது சென்னையில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் பிற மாவட்டங்களில் அதிகரித்து வருவது கவலையளிக்கும் வகையில் உள்ளது

இந்த நிலையில் சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி தமிழ்நாட்டில் இன்று 4526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றுதான் அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னையில் மட்டும் இன்று 1078 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,47,324 என்பதும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 79,662 என்பதும் குறிப்ப்பிடத்தக்கது

மேலும் இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் 67 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2099 என்பதும குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4743 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 97,310 ஆகும். மேலும் இன்று ஒரே நாளில் 39,776 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் இதுவரை மொத்தம் 16,25,558 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.