தமிழகத்தில் இன்று அதிகபட்ச பலி எண்ணிக்கை: அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தபோதிலும் கடந்த மாதம் வரை பலி எண்ணிக்கை குறைவாகவே இருந்ததால் மக்களிடம் ஒருவகை ஆறுதல் இருந்தது. ஆனால் இந்த மாதம் தொடங்கியதில் இருந்தே தினமும் சராசரியாக 60க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக இன்று உச்சகட்டமாக 79 பேர் பலியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி தமிழ்நாட்டில் இன்று 4538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் சென்னையில் மட்டும் இன்று 1243 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 160,907 என்பதும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 83,371 என்பதும் குறிப்ப்பிடத்தக்கது

மேலும் இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் 79 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2315 என்பதும குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,391 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,10,807 ஆகும். மேலும் இன்று ஒரே நாளில் 48669 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 18,31,304 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

மும்பையில் 4 வீடுகள் இருந்தும் பிச்சை எடுத்த முதிய பெண்: கொலை செய்த மருமகள்

மும்பையில் ஒரே ஒரு வீடு இருந்தாலே பணக்காரர் என்ற நிலையில் நான்கு வீடுகள் இருந்தும் பிச்சை எடுத்து வந்த முதிய பெண் ஒருவரை அவரது மருமகளே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம்

HCL நிறுவனத்தின் தலைவராகும் இந்தியாவின் பணக்காரப் பெண்!!!

HCL நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பு வகிக்கும் ஷிவ் நாடார் வருகிற 17 ஆம் தேதி தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

லட்டு பிடிக்கிறவரையும் இந்த கொரோனா விட்டு வைக்கல… திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏற்பட்ட பரபரப்பு!!!

உலகத்துக்கே படியளுக்குற ஏழுமலையான் கோவிலில் தற்போது கொரோனா தாண்டவமாடத் தொடங்கியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

டபுள் பவருடன் கொரோனா தடுப்பூசி: கெத்துக் காட்டும் விஞ்ஞானிகள்!!! எப்ப கிடைக்கும் தெரியுமா???

தற்போதைய நிலைமையை பொறுத்தவரை கொரோனா தடுப்பூசி மட்டுமே இறுதி தீர்வு என ஒட்டுமொத்த உலகமும் நம்பிக் கொண்டிருக்கிறது.

பிளஸ் 2வில் முதல் மார்க் எடுத்த மாணவர் தற்கொலை: வேலூர் அருகே அதிர்ச்சி சம்பவம்

ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் போது, தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும்