சராசரியாக தினமும் 60ஐ தாண்டும் பலி எண்ணிக்கை: தீவிரமடைகிறதா கொரோனா?

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக சராசரியாக 4000ஐ தாண்டி வரும் நிலையில் தினமும் சராசரியாக 60 பேர்களுக்கும் மேல் கொரோனாவால் பலியாகி வருகின்றனர். அதாவது கடந்த மாதம் 29ஆம் தேதி முதல் இன்று வரை தினமும் கொரோனாவால் பலியானவர்களின் தினசரி எண்ணிக்கை 62,60,63,57,64,65,60,61,65,64,65,64,69,68,66,67,68.69 என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி தமிழ்நாட்டில் இன்று 4549, பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் சென்னையில் மட்டும் இன்று 1157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,56,369 என்பதும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 82128 என்பதும் குறிப்ப்பிடத்தக்கது

மேலும் இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் 69 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2236 என்பதும குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5106 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 107,416 ஆகும். இன்று குணமானோர் எண்ணிக்கை 5000ஐ தாண்டியுள்ளது பாசிட்டிவ்வாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று ஒரே நாளில் 44,186 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 17,09,459 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

தமிழக பள்ளி மாணவர்கள் இனி தொலைக்காட்சியில் பாடம் படிக்கலாம்!!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!!

தமிழக அரசு, கல்வி தொலைக்காட்சியை நிறுவி அதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது.

அமித்ஷாவிடம் கைகூப்பி கோரிக்கை விடுத்த சுஷாந்த் சிங் காதலி!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் மன அழுத்தம் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பாலிவுட் திரை உலகையே உலுக்கியது.

தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் திறக்கப்படுகிறதா திரையரங்குகள்? பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதும் இதனால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் புதிய திரைப்படங்கள்

வந்தால் ஐபிஎஸ் அதிகாரியாக வருவேன்: குஜராத் சிங்கப்பெண் சபதம்

குஜராத் மாநிலத்தின் சுகாதார அமைச்சரின் மகனின்  நண்பர்கள் சாலையில் ஊரடங்கு நேரத்தில் சுற்றி திரிந்ததை கண்டித்த பெண் போலீஸ் அதிகாரி சுனிதா இடமாற்றம் செய்யப்பட்டார்

9 மாத குழந்தை கொரோனாவுக்கு பலி! புதுவையில் அதிர்ச்சி

புதுவையில் 9 மாத குழந்தை ஒன்று கொரோனாவுக்கு பலியாகி இருப்பது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது