close
Choose your channels

48 வயது பெண் பாலியல் பலாத்காரம், கழுத்தறுத்து கொலை: விருதுநகரில் அருகே பரபரப்பு

Saturday, December 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே 48 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ராணி சேதுபுரம் என்ற பகுதியில் சத்தியபாமா என்ற 48 வயது பெண் வாழ்ந்து வந்தார். இவருடைய கணவர் இரண்டு வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். ஒரே மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாகவும் தெரிகிறது

சத்தியபாமா தனது சொந்தமான நிலத்தில் சோளம் பயிரிட்டு வந்து அதை தினசரி கவனித்துக் கொள்வார் என்று அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இது போல் ஒருநாள் அவர் வழக்கம்போல் சோளம் பயிரிட்ட தனது நிலத்திற்கு சென்றபோது நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து சோள காட்டில் சென்று பார்த்தபோது அங்கு ஆடை களையப்பட்டு உருக்குலைந்து போய், கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சத்யபாமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்

48 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.