close
Choose your channels

தமிழகத்தில் இன்று எத்தனை பேருக்கு பாசிட்டிவ்? அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

Saturday, April 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்ற விபரங்களை தமிழக சுகாதாரத்துறை அறிவித்து வரும் நிலையில் சற்றுமுன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 பேர் என்றும் இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1372ஆக உயர்ந்துள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மேலும் இன்று மட்டும் 82 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து மொத்தம் 365 பேர் குணமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் இன்று யாரும் கொரோனாவால் உயிரிழக்கவில்லை என்பதால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆகவே உள்ளது. மேலும் இதுவரை தமிழகத்தில் 35 ஆயிரம் பேர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos