close
Choose your channels

ஒன்றல்ல, இரண்டல்ல 49 பேர் வெற்றி: விஜய் மக்கள் இயக்க தலைவர் தகவல்!

Tuesday, October 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடைபெற்ற முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ஒருவர் ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம். இந்தநிலையில் ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 49 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிட்ட பிரபு என்பவர் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய தலைவர் புஸ்ஸி ஆனந்த் இதுகுறித்து கூறிய போது ’ஊரக உள்ளாட்சி தேர்தலில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மொத்தம் 169 பேர் போட்டியிட்டதாகவும் தற்போது வரை 36 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என்றும் 13 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் இதனை அடுத்து 49 பேர் பெற்றுள்ளனர் என்றும் கூறியுள்ளார். மேலும் வெற்றி பெற்ற அனைவருமே வலுவான திமுக, அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜயகாந்தின் தேமுதிக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் இன்னும் ஒருவர் கூட வெற்றி பெறாத நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு 49 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.