ஊரடங்கு உத்தரவு எதிரொலி: பெங்களூரில் வேலையிழந்த 496 ஐடி ஊழியர்கள்

ஊரடங்கு உத்தரவு காரணமாக தின தொழிலாளர்கள் உள்பட பல்வேறு தொழிலாளர்கள் வேலையின்றி வருமானமின்றி பசியும் பட்டினியுமாக இருக்கும் நிலையில், இந்தத் தாக்கம் ஐடி தொழிலாளர்களையும் பாதித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட போதே தனியார் நிறுவனங்கள் எந்த ஒரு பணியாளர்களையும் வேலையை விட்டு நீக்க கூடாது என்றும் அவர்களுக்கு உரிய சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

ஆனால் அரசின் அறிவுறுத்தலை மீறி பெங்களூரில் உள்ள ஒரு சில ஐடி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக சிஐடியு சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து சிஐடியு பொதுச்செயலாளர் தபன்சிங் அவர்கள் தொழிலாளர் நல வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அரசின் உத்தரவை மீறி ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் 496 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கிய நிறுவனங்கள் குறித்த விபரங்களை தொழிலாளர் துறை அமைச்சகத்துக்கு கடிதமாக எழுதி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவை காரணம் காட்டி 496 பேர் வேலையிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News

1400 கிமீ ஸ்கூட்டியை அடுத்து 130 கிமீ மனைவியை சைக்கிளில் அழைத்து சென்ற முதியவர்

ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியூரில் தவித்த மகனை 1400 கிமீ ஸ்கூட்டியில் அழைத்து வந்த வீரத்தாய் குறித்த செய்தியை காலையில் பார்த்தோம்.

மருமகளுக்கு கொரோனா தொற்று, மாமியார் பலியான பரிதாபம்: தூத்துகுடியில் பரபரப்பு

தூத்துக்குடியில் லேப் டெக்னீசியன் பணி செய்யும் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அவரது குடும்பத்தில் உள்ள கணவர், மாமியாருக்கும் கொரோனா தொற்று பரவி,

தமிழகத்தில் இன்று 77 பேர்களுக்கு கொரோனா தொற்று: தலைமைச்செயலாளர் தகவல்

கொரோனா வைரஸால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை தினமும் சுகாதாரத்துறை அளித்து வரும் நிலையில் சற்றுமுன் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தலைமைச்செயலாளர்

ரூ.25 கோடியை அடுத்து மீண்டும் பெரிய தொகையை நிதியுதவி செய்த அக்சய்குமார்

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள் தாராளமாக நிதி உதவி செய்ய வேண்டும்

ஊரடங்கு நேரத்தில் புகையிலை எப்படி கிடைத்தது? பிரபல நடிகருக்கு நெட்டிசன்கள் கேள்வி

பிரபல பாலிவுட் நடிகரும் நயன்தாரா நடித்த 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாக நடித்தவருமான அனுராக் காஷ்யப் சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோ நெட்டிசன்களால் சர்ச்சை.