close
Choose your channels

லடாக் தாக்குதலில் 5 சீன வீரர்கள் பலி: 11 வீரர்கள் காயம் என தகவல்

Tuesday, June 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக் பகுதியில் நேற்று இரவு நடந்த தாக்குதல் ஒன்றில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்ற செய்தியையும் அதில் ஒருவர் இராணுவ அதிகாரி என்பதும் இன்னொருவர் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சீன ஊடகம் ஒன்று இந்த தாக்குதல் குறித்து செய்தி வெளியிட்டுள்ள நிலையில், அதில் லடாக் பகுதியில் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 3 பேர் மற்றும் சீன வீரர்கள் 5 பேர் பலியானதாக தகவல் அளித்துள்ளது. மேலும் 11 சீன வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் அந்த சீன ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது

மேலும் இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை ’இந்தியாதான் எல்லையில் முதலில் தாக்குதல் நடத்தியது என்று குறிப்பிட்டுள்ளது. இந்திய வீரர்கள் முதலில் தாக்குதல் நடத்தியதால் தான் இரு நாட்டு வீரர்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த மோதல் குறித்து இருதரப்பினர்களும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனை தீர்த்து கொள்ளலாம் என்றும் சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.