close
Choose your channels

சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ் திடீரெனத் தீப்பிடித்து எரிந்த சம்பவம்!!! குழந்தை உட்பட 5 பேர் பலி!!!

Wednesday, August 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தின் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பஸ் ஒன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அம்மாநிலத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 30 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டிருந்த பேருந்தில் திடீரெனத் தீப்பிடித்ததால் குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் 27 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த பேருந்தில் எப்படி தீப்பிடித்தது என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது. படுகாயங்களுடன் தற்போது 27 பேர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. கொரோனா ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வு கொண்டு வரப்பட்ட சில தினங்களாகத்தான் அம்மாநிலத்தில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.