close
Choose your channels

5 மாத கர்ப்பிணி தூக்கில் தொங்கி மர்ம மரணம்: கணவர், மாமியார் கைதானதால் பரபரப்பு

Wednesday, December 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருமணம் முடிந்து ஏழு மாதமே ஆன ஐந்து மாத கர்ப்பிணி பெண் ஒருவர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய மரணமடைந்த சம்பவம் விழுப்புரம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் என்ற ஊரில் 28 வயது கணேஷ்பாபு என்பவருக்கும் 20 வயது சூர்யா என்பவருக்கும் கடந்த ஏழு மாதத்திற்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இதனை அடுத்து சூர்யா 5 மாத கர்ப்பமாக இருந்தார்

இந்த நிலையில் கணேஷ்பாபு-சூர்யா தம்பதிகளுக்குள் அடிக்கடி தகராறு வந்து கொண்டதாக தெரிகிறது. இதே போல் நேற்றும் ஒரு தகராறு வர, சூர்யாவை கணேஷ்பாபு அடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அழுது கொண்டே இருந்த சூர்யா திடீரென தூக்கில் தொங்கி மரணமடைந்துவிட்டதாக அவருடைய தாயாருக்கும் கணேஷ் பாபு போன் செய்து தகவல் கூறியுள்ளார் 

இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த சூர்யாவின் பெற்றோர் உடனடியாக வந்து சூர்யாவை தூக்கி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சூர்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுகுறித்து போலீசில் புகார் செய்துள்ளார்

சூர்யாவின் பெற்றோர் ’என் மகளை கணேஷ்பாபுவும் அவருடைய அம்மாவும் தான் அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுள்ளனர், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் சூர்யாவின் கணவர் கணேஷ்பாபுவையும், அவரது அம்மா லட்சுமியையும் கைது செய்தனர் 

ஐந்து மாத கர்ப்பிணி பெண் ஒருவர் தூக்கில் தொங்கி மர்மமான முறையில் மரணம் அடைந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.