டெல்லியில் இருந்து பெங்களூருக்கு தனியாக வந்த 5 வயது சிறுவன்: சக விமான பயணிகள் நெகிழ்ச்சி

டெல்லியில் இருந்து பெங்களூருக்கு 5 வயது சிறுவன் ஒருவன் தனியாக விமானத்தில் பயணம் செய்தது சக பயணிகளை நெகிழ வைத்துள்ளது

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு, அதன் பின்னர் நான்கு முறை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவு வரும் 31ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதை அடுத்து நேற்று முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கியது

இந்த நிலையில் டெல்லியில் இருந்து பெங்களூருக்கு 5 வயது சிறுவன் ஒருவன் சிறப்பு பிரிவு மூலமாக விமானத்தில் பயணம் செய்துள்ளார். 5 வயது சிறுவன் தனியாக விமானத்தில் பயணம் செய்தது சக பயணிகளை நெகிழ வைத்துள்ளது. இந்த சிறுவன் கோடை விடுமுறைக்காக டெல்லியில் உள்ள தனது தாத்தா பாட்டி வீட்டிற்கு கடந்த பிப்ரவரியில் சென்றதாகவும் இதனிடையே திடீரென கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அந்த சிறுவன் கடந்த மூன்று மாதங்களாக டெல்லியிலேயே சிக்கிக் கொண்டதாகவும் தெரிகிறது

இதனையடுத்து தனது பெற்றோரை பார்ப்பதாக தவித்துக் கொண்டிருந்த அந்த சிறுவன் நேற்று விமானம் இயங்கத் தொடங்கியதும் டெல்லியில் இருந்து விமானத்தில் அவரது தாத்தா அந்த சிறுவனை பெங்களூருக்கு அனுப்பி வைத்தனர். நேற்று பெங்களூர் வந்த அந்த சிறுவன், மூன்று மாதங்களுக்கு பின்னர் தனது பெற்றோரை சந்தித்தான் என்பது குறிப்பிடத்தக்கது

More News

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை பள்ளிகள் திறக்கப்படாது: அதிபர் அதிரடி

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பள்ளிகள் கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடதக்கது. பெரும்பாலான நாடுகளில் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று

இந்தியாவில் கொரோனா பாதிக்காத ஒரே இடம் எது தெரியுமா???

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கொரோனாவில் இருந்து குணமாகிய 26 வயது இளைஞர் 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

துபாயில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதன் பின் குணமான இந்திய இளைஞர் ஒருவர் ஏழாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவ ஊழியர் மரணம்: விடுமுறை அளிக்கவில்லை என புகார்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவ ஊழியர் ஒருவருக்கு விடுமுறை அளிக்காததால் அவர் பரிதாபமாக மரணம் அடைந்ததால் மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து சோதனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்த WHO!!! நடப்பது என்ன???

கொரோனா சிகிச்சைக்கு இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட எந்த மருந்தையும் உலகச் சுகாதார அமைப்பு பரிந்துரைக்க வில்லை.