close
Choose your channels

பசியால் உயிரிழந்த சிறுவனின் மரணத்தில் திடீர் திருப்பம்… சிசிடிவி காட்சிகளால் அதிர்ச்சி!

Thursday, December 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள மேலத்தெரு எனும் பகுதியில் கடந்த 15 ஆம் தேதி 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் தள்ளுவண்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து சிறுவனை யார் கொலை செய்தது? என்பது போன்ற விசாரணையை போலீசார் தனிப்படை அமைத்து மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட பிரேதசப் பரிசோதனையில் சிறுவனின் குடலில் கடந்த இரண்டு நாட்களாக உணவு, தண்ணீர் எதுவும் இல்லை. அதனால் சிறுவன் பசியால் உயிரிழந்திருக்கக்கூடும் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து ஒரு குழந்தை பசியால் உயிரிழந்துவிட்டதா? என ஒட்டுமொத்த தமிழகத்திலும் கடும் பரபரப்பு கிளம்பியது. பொதுமக்கள் மத்தியிலும் இந்த மரணம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சிறுவன் குறித்த 2 சிசிடிவி காட்சிகளை போலீசார் தற்போது வெளியிட்டு உள்ளனர். அந்தக் காட்சியில் 2 ஆண்கள் உள்ளனர். மேலும் அதில் ஒருவர் சிறுவனை தனது தோளில் சுமந்து செல்கிறார். முதலில் விராட்டிக்குப்பம் காளிகோயில் பகுதியில் இந்த சிசிடிவி காட்சி பதிவாகி இருக்கிறது. மற்றொன்று மேலத்தெரு பகுதியில் சிறுவன் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் பதிவாகியுள்ளது.

இந்தக் காட்சிகளால் சிறுவனை அந்த இருவரும் கடத்திக் கொண்டு சென்று கொலை செய்திருக்கலாம். அல்லது மிரட்டி பிச்சையெடுக்க வைத்திருக்கலாம் என்பது போன்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. இதையடுத்து வடமாநிலத்தை சேர்ந்தவர் போல இருக்கும் அந்த இருவரை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டிவருகின்றனர் .

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.